நன்மையாயும், தீமையாயும் நீயே ஒன்றினுள் ஒன்றாய் மறைந்தாய்.



நன்மையாயும், தீமையாயும்  நீயே ஒன்றினுள் ஒன்றாய்  மறைந்தாய்.

எமக்கென்ன வேண்டுமோ, அதை அளிக்கத்  தான் அனைவருமாய் பறந்து  விரிந்தாய். .

நான் என்ன கற்க வேண்டுமோ, அதைக் புகட்ட முடிந்த மனிதனாய் எம் அருகில் பிறந்து வளர்ந்தாய்.

தண்டிப்பதும்,  வாழ்த்துவதும் இங்கு நோக்கம் அல்ல என்னை பக்குவப்படுத்துவதே  தான் உன் நோக்கம் போலும்.

நடப்பதில் இருந்து நான்  கற்கிறேனா ? இல்லை நான் கற்கவே நீ  நாடகத்தை நடத்துகிறாயா ?

நேற்று நடந்த நாடகத்தின் நண்பன் இன்று பகைவன்.

இன்று நடக்கும் நாடகத்தின் நண்பன் எதை கற்பிக்க பகைவன் ஆவானோ 

உனக்கே  தெரியும்!

நண்பனும் பகைவனும் செய்தது நன்மை மட்டும் தான் ?

காண்பன யாவுமே நன்மையே செய்கிறதே! எதை வெறுக்க ? 

 வெறுப்புக்கு வறுமை செய்தாய் இவ்வுலகில்! சிரிப்பதை தவிர என்ன செய்வேன் இப்பொழுதில்!

நான் தவறி செய்யும்  தீமையும், முடிவில் நன்மையாக்கினாய்.

மாயா தேவியே!

அற்பமாய் நான் செய்யும்  தீமையொழிக்க நீயே  என் பகைவனானாய் . 

எனில் நண்பனுக்கு விளக்கம் தேவையோ எமக்கு? 

என்று  அவன்  பகைவன் எனும் நன்மை ஆவானோ. 

அசைவற்றுக் கிடக்கும்  செத்தப்பாம்பை  காற்றாய் மாறி நகர்த்தி பின் அவ்வசைவை  பெருந்தன்மையுடன் உலகிற்கு நன்மையாகியதோடல்லாமல் விளைவின் பயனை பாம்பிற்கே கொடுத்து உயிர்ப்பிக்கும்  அன்பே, கருணையே  ! தாயே ! நீதான் சக்தி  என்று அழைக்கப் படுகிறாயோ!

இதைக் கேட்பதுவும் நானா இல்லை அதுவம் நீயோ!

காலமே!.........  உணர்வற்ற இந்த செத்தப் பாம்பிற்கு, சிறு அசைவின் ஆணவம் பெருத்துவிட்டதை அறிந்து,  அதைப் புகட்ட நீ நடத்தும் நாடகம் எனக்கு அனைத்தும் நீயாகக் காட்டுகிறதே!  

ஆச்சரியம் ஒன்றே நிரந்தரம் உன் படைப்பில்.

அன்பைத் தவிர இவ்வுலகில் ஒன்றுமில்லை என்றுணர்த்தேன். அன்பே திரிந்துள்ளது எங்கும் சக்தியாய். 

By 
பாலாஜி 


தொழில்ஸ்தாபனத்தில் நீங்க வெற்றி பெற

தொழில்ஸ்தாபனத்தில் நீங்க வெற்றி பெற பின்பற்ற வேண்டிய சில பிரதான விஷயங்கள். இவை நான் படித்தது அல்ல;  உணர்ந்தது.

  1. வெற்றியோ தோல்வியோ, அதற்கு காரணம் இன்னொரு சக மனிதனாகத் தான் இருக்க முடியும். அதனால் சக ஊழியர்களை அரவணைத்து செல்லுவது மிக முக்கியம்.
  2. அனைவரிடம் இருந்தும் ஏதேனும் ஒரு விஷயமாகிலும் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்கள் அனைவரும் இயற்க்கை நமக்கு அன்பளிப்பாக கொடுக்க பட்டிருக்கும் புத்தகங்கள்.
  3. யாருடைய வளர்ச்சியையும் தடுக்க நினைப்பது முட்டாள்த்தனம்.  ஏனென்றால் அருகில் இருப்பவனை வளர்ப்பது இயற்க்கை. மேலும் அவன் வளர்வது நீங்கள் வளர்வதற்கு சமம்.  இதை உணர அனுபவம் தேவை. உதாரணத்திற்கு உங்கள் நண்பன் ஒரு விலை உயர்ந்த car  வாங்கினால், நீங்கள் அதை பற்றி எல்லா விஷயங்களும் தெரிந்து கொள்வீர்கள்.  அதை இயக்கி பார்ப்பீர்கள்.  அந்த ஆசையில் நீங்கள் விரைவில் அதை போன்று வாங்க அது ஒரு உந்து சக்தியாக உங்களுக்குள் இருக்கும்.  மற்றவர் வளர்ச்சியில் பங்குகொண்டு மகிழ நாம் பழகிக்கொள்ள வேண்டும்.
  4. பொறாமை உங்கள் முக வசீகரத்தை இழக்க செய்யும். ஆகையால் அதை அறவே கைவிட வேண்டும்.  அது நம் அருகில் இருக்கும் அனைவரையும் நம்மிடம் இருந்து விலக் கிவிடும்.  நம்மை சுற்றி எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது தான் நமது வெற்றியை நிர்ணயிக்கிறது.
  5.  தேவையில்லாப்  பேச்சு உங்கள் குரலில் உள்ள நேர்மையை சந்தேகிக்கச் செய்யும்.  உங்கள் பேச்சு தேவை இல்லாததாகிவிடும்.
  6. அளந்து பேசுவது உங்களுக்கு மரியாதையை பெற்றுத்தரும்.
  7. பேச்சை குறைப்பது கவனமில்லா வம்பில் இருந்து உங்களை காப்பாற்றும்.
  8. வம்பு மிகவும் வீணான செயல்.  நம் அறிவையும், தவறையும் ஆராயாது, தன்னிலை உணராது, மற்றவரின் கதையை நம் இஷ்டத்திற்கு மிகைப்படுத்தி ஆனந்தம் கொள்ளும் அற்ப மான அவா.  அறிவு மற்றும் ஆன்ம வளர்ச்சிக்கு எதிரானது.
  9. தனி ஒரு நபரிடம் போட்டி போடுவது என்பது நகைக்கத்தக்கது.  ஏனென்றால் அந்த போட்டி இந்த பெரிய பறந்து விரிந்து கிடைக்கும் உலகத்தில் உள்ள வாய்ப்புகள் அனைத்தையும் மறைத்து அந்த நபரை மட்டுமே கனவிலும் நினைவிலும்  காட்டும் மாயக்கண்ணாடி. போட்டியில் கஞ்சம் எதற்கு? பெரியதாக வைத்துக்கொள்ளலாமே.
  10. நமக்கு  மட்டுமே தெரியும் என்ற ஆணவமும் அதிகார போதையும் வளர்ச்சி பெறாத மூளையை வெளியே படம் போட்டுக்  காண்பிக்கும் அற்ப குணம். அனைவரையும் நம்மை பார்த்து சிரிக்கச்  செய்துவிடும்.
  11. சும்மா இருப்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் ஊரு விளைவிக்கும் செயல். ஏனென்றால் மனித உடல் தொடர்ந்து இயங்கும் வகையில் மட்டுமே படைக்கப்பட்டிருக்கிறது.
  12. இன்றைக்கு நாம் பயனுள்ளவர்களாக இருந்தால் நாளைக்கு நாம் தேவைப்படுவோம்.   நாம் வேளையில் நிலைத்திருக்க, ஒவ்வொரு நாளும் நாம் பயனுள்ள ஒன்றையாவது செய்யவேண்டும, 
  13. மேலதிகாரியிடம் பணிவாக இருப்பது நம் முதிர்ச்சியையும், திறமையையும் கொண்டு சேர்க்கும் மூங்கில் பாலம்.
  14. அவமரியாதை செய்வது, வாய்ப்புகள் வேண்டாம் என்று விளம்பரம் செய்வதைப்போன்றது.
  15. கண்ணியமான பேச்சு நட்பு, செல்வம், மரியாதை அனைத்தையும் தரவல்லது.
  16. கண்ணியமாக பேசமுடியாவிட்டால், பேசாமல் இருப்பது பெருமை சேர்க்கும்.
  17. நம்மை நோக்கி வரும் அனைத்தையும் இயற்க்கை தரும் நல்ல வாய்ப்பாக எண்ணி பொறுப்பேற்க வேண்டும்.
  18. நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்கிறோம். என்பதை மறக்காமல் இருக்க முயற்சிக்க வேண்டும்.
--
பாலாஜி 


ஈகோ



ஏதோ ஒரு விஷயம்.  எது வேண்டுமாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.அது நமக்கு தெறியாது என்ற உண்மை ஊருக்கே தெரியும் ஆனால் அது  நம்மக்கு தெறியாது என்று நமக்கே தெறியாது .  இதுதான் ஈகோவின் அடிப்படை நிலை. எவ்வளவு நகைக்கத்தக்க பரிதாப நிலை!

இதன் அடுத்த பரிமாணம்,

எனக்கு மட்டுமே தெரியும் என்பது. 

இதன் அடுத்த பரிமாணம்,

என்னால் மட்டுமே இதை சரியாக செய்ய இயலும்.

சற்று முற்றிய நிலை :-)

யாராலும் இதை அறிய முடியாது,யாராலும் இதை செய்ய முடியாது...

Final Stage and need to be admitted in the mental hospital:  நானே அறிவாளி மற்ற அனைவரும் முட்டாள்கள் மற்றும் பைத்தியக்காரர்கள்.

இந்த ஈகோ கவனமின்மையால் வந்தது.  சுயநலத்தால் வந்தது.  உலகை நாம் குழந்தையை போல் கூர்ந்து கவனிக்க வேண்டும்.  கவனித்தால் நம் ஈகோ குறைந்து, கறைந்து  அன்பு, கருணை என்னும்  தடாகமாக ஓடும். 


  • தயிரை புளிக்க வைக்கும் பாக்டீரியா செய்யும் வேலையை நம்மால் செய்யமுடியுமா?
  • தாவரங்களின்றி நாம் சுவாசிக்க முடியுமா?
  • மனிதர்களின்றி இன்றி தாவரங்கள் சுவாசிக்க முடியுமா?
  • உழவனின் நண்பன் மண்புழு என்பது நமக்கு இன்னும் நினைவிருக்கிறதா?.
  • நாம் போட்டுக்கொள்ளும் இன்சுலினில்  எத்தனை பன்றிகளின் பங்கு உள்ளது என்று தெறியுமா?
  • தாய்ப்பாலில்லாத பிறந்த குழந்தைக்கு எத்தனை பசுக்கள் அம்மா ஆகின என்பதில் கவனம் இருக்கிறதா? அதை நினைவூட்டத்தான் அது அம்மா என்று கதறுகிறதா?
  • நாம் சாப்பிட எத்துணை மனிதர்கள் உழைக்கிறார்கள் என்பதில் நமக்கு கவனம் இருக்கிறதா?
  • இந்த பிரபஞ்சத்தில் பூமி எவ்வளவு பெரியது தெறியுமா? 
  • இந்த ஒப்பீட்டில் நமது வாழ்நாள் என்பது ஒரு TINY FLASH என்பது நமக்கு நினைவிருக்கிறதா?

No matter we know all the above, But

How many hours in 24 hours are we conscious about it will change the quality of our life.

The most craziest thing is Ego.

நம் வாழ்வின் அடிப்படை இந்த உலகத்தோடு ஒன்றிணைந்து நடப்பது.  நான் என்ற தனிமை படுத்தும் சொல் மிகவும் நகைக்கத்தக்கது.  இந்த உலகின் அடிப்படை எப்படிஎன்றால் ,

ஒன்றோடு ஒன்று இணைந்தால் தான் இன்னொன்று பிறக்கும்.  தனிமை அல்லது exclusion அசைவற்றது.

இந்த அடிப்படை படைப்பில் இருக்கும் அனைத்திற்கும் பொருந்தும்.  இந்த அடிப்படையில் இருந்து நம்மை பிறிபது  தான் ஈகோ. இது பயனற்றது.


--
Balaji

Tips to Handle Criticism


If someone criticizes you, welcome it! If there is some substance in it, take it. If the criticism is coming out of jealousy, frustration, or anger, it is good to practice indifference. Don’t lose your equanimity.

If someone criticizes you and you counter it by criticizing them, then the chain continues. Instead, thank them for their kind words and see what happens. The day you drop your defenses, the other person will not know how to respond.

If someone is giving you constructive criticism, welcome it! They are taking the risk of losing your friendship and giving you criticism. 

Don't defend your mistakes. Just accept them and move on. When you are totally defenseless, that's when you'll be strong.

Every time you face criticism, know that you are vast like the ocean and you can take in anything. When you feel small, that is when you don’t feel like taking criticism. When you feel very big, then you think, “I am much bigger than this criticism, let me take it in.”

Know that people are there to help you in the world. Don’t see people as enemies. The foolish will look at the world as filled with hostile people. The wise will look at the world as filled with friends, and think that people are there to help.

Smile not only when compliments are given, but when you are criticized too. A person of true patience and courage is one who can respond to any insult or criticism with an unshakeable smile.
Unjust criticism should also be taken with a smile. To begin with, you may feel very uncomfortable, but there will be a shift in you, with which you will be so amazed.

Respond to criticism with humor and wit. If you get angry with someone who taunts you, then that is not intelligent behavior. The sign of intelligence is to transform an unpleasant situation into a pleasant one.
One who looks for pleasantness even in unpleasant or unfavorable situations is truly an intelligent person.

If somebody is talking negatively about you, they are dumping garbage. You should not hold your gunny bag and catch it. When somebody is dumping garbage, you simply move away from there. Don't take it in.

Have the ability to give constructive criticism from a happy, calm mind and be able to take constructive criticism from the same mind. This will transform your ego.

If anyone anywhere humiliates you, know that it is only a plan to soften you. It is a blessing. Sri Sri

Contentment and Truth Ashtawakra Gita

Ashtavakra Gita: If you only had ten days to live in the planet, what would you want to do? Sit and think what your priorities are. Are you worried about your relationship? In ten days you are going to go away; kick the bucket! Are you worried about your property? Are you worried about your friends and foes? Are you worried about what you are going to eat, your eating preferences? What are your preferences? Ten days to live of your life, and what are you going to do? We keep living as though we will live forever. We hang onto things as though they will be there forever. We forget the sense of time and life - the flow of life. Isn't that our only problem?

You're so concerned about your relationship. A lady didn't smile at you or a boy went with somebody else! What are you worried about? Where will they be? People are burned down with this sense of relationship. People are burned down with things about friends; wasting precious life and time. A friend of yours behaved badly with you and hurt you. What actually hurts you is your foolishness. Let them behave the way they want! But you want everybody to be on your railway tracks. You haven't railway tracks for people, and you want everybody to walk on those tracks. The moment they give you a surprise, you say you never wanted that in your life. How can you get over it? What do you want to get over? Just wake up and look! Neither of you are going to be here long! You will both be under the earth in no time. You won't even be able to recognize this body. And if you continue to live like that, nobody will even take your name. Nobody will even know you existed on this planet. Anyway, even if they do, it has no meaning for you, does it? Where are you to begin with? You feel that one the person did this to you and another person did that. They did not smile at you, or that they smiled at you. That they said something good; they did this..... Where is your freedom? We carry such stupid things with us wherever we go! A doormat can remove mud from your feet, but if you carry mud in your head. What can remove it?

Contentment! If people have behaved well with you and been friendly to you, thank them for what they have done to you. Don't become a burden on them. Contentment! The whole world needs to understand this; the entire world is burning out for nothing! Every moment put yourself into knowledge. Everybody should be immersed in two or three hours of seva (service). Otherwise we talk about colourful dresses! Okay, you bought colourful dresses and put them on, so what! You don't even look at your own dress, you always look at others! Someone else has a nice, colourful dress. You can look at it and enjoy! We want to put them all on, and forget how many nice and beautiful clothes we have. We look for what we do not have and there will be no contentment. I have nothing against you wearing beautiful dresses. In fact, I like it! It looks very nice when everybody wears nice dresses; it is very festive and colourful. I am all for it. But much more than that, I would like you to be contented about it in your mind, in your heart. Don't have feverishness or craving for it.

दयातोषसत्यं पीयूषवद् भज । Truth is the fifth of the five principles. Truth is what is right now! This is truth! What is the truth? You are not going to be here all the time. At least, this body is not going to be here all the time. This is the truth. It's solid truth. And this body is always changing-another solid truth! This body is always changing, the second truth. The whole world is changing. People are changing; their minds are changing. Everything is changing. Do we ever think about it - how everything is changing? This truth does not cross our mind at all! We grab any little negative something here and there - "something is not changing; that person is not changing! All these things in me are not changing!" You hold onto something; even that is changing. Wake up and see that everything is changing. This is truth. This one principle of truth can save you. All is changing. It makes you so firm, strong and solid inside. Nothing on this planet can shake you. Nothing whatsoever can shake you; you get established. The simple truth - you don't have to read books or do any big sadhana.

நோயற்ற வாழ்விற்கு 30 குறிப்புகள்

நோயற்ற வாழ்விற்கு 30 குறிப்புகள்..... 

1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.

2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.

3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.

4. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.

5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.

6. நிறைய புத்தகம் படியுங்கள்.

7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.

8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.

9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.அவர்கள் பயணிக்கும் /மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.

11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.

12. உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.

13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.

14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.

15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.

16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.

17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.

18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.

19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும்,பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.

20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.
21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும்,வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.

22. மன்னிக்கப் பழகுங்கள்.

23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.

24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.

25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.
26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.

27. ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.

29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ,நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.

30. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும். ߑͰߑͰߑͰߑͰߑ̀

தவம்/Meditation


தீட்டா' அலையிலும், 'ஆல்பா' அலையிலும் விழிப்பு நிலையிலேயே இருக்கப் பழகிக் கொண்டோமானால், மற்றவர்களுடைய எண்ண அலைகள் தீமை விளைவிப்பனவாக இருந்தாலும், உணர்ச்சிக்கு ஊக்கம் கொடுப்பவையாக இருந்தாலும் அவை நம்மைப் பாதிக்கா.


உதாரணமாக நான்கு வானொலி நிலையங்கள் நான்கு விதமான வேறு பட்ட நிகழ்ச்சிகளை ஒரே நேரத்தில் ஒளிபரப்புகின்றன. நம் ரேடியோவை எந்த அலை நீளத்தில் வைக்கிறோமோ அது மாத்திரம் தான் கேட்கும். மற்றவை எல்லாம் வந்து மோதும்; ஆனால் கேட்காது. அது போலவே, தேவையற்ற அலைக் கழிப்பும் பாதிப்பும் இல்லாமல் விட்டு விலக  எந்த நிலையில் இருக்கிறோமோ அந்த நிலைக்கு ஏற்ப நமக்கு என்ன தேவையோ அது கிடைக்கும். நாம் என்ன செய்ய வேண்டுமோ அதை நினைப்போம். நாம் என்ன நினைக்கிறோமோ அதைச் செய்ய முடியும் என்ற அளவிலே மனிதத் திறமை வெளிப்படுகிறது. 


இந்த மனிதத் திறமை அதிகரிக்க அதிகரிக்க என்ன ஆகும்? நாம் எங்கு போனாலும், நமக்காக மற்றவர் தாமாகவே அந்த அலையிலேயே கட்டுப்பட்டு, நம் மதிப்பை உணர்ந்து புரிந்து கொள்ள அவர்களுக்கு எண்ணம் தோன்றும். எங்கே போனாலும் நமக்கு வெற்றியாகவே இருக்கும்.

அப்படி எங்கேயாவது வெற்றி இல்லாமல் தடை ஏற்பட்டாலும், அந்தத் தடையினால் நமக்குக் கெடுதல் இல்லை. "நம்மைத் திருப்பி விடுவதற்காக இந்த அலை நீளத்தில் தேவையில்லாதவற்றைத் தள்ளி விடுகிறது. அதனால் அந்த வேலை நடக்கவில்லை" என்று எண்ணி அமைதி அடைந்தால், எந்தக் காலத்தில் எந்த சூழ்நிலையில் அந்த வேலை நடக்க வேண்டுமோ அது தானாகவே நடந்துவிடும்.

"படிக்கும்போது தவம் செய்யலாமா; இரவில் செய்யலாமா?" என்றெல்லாம் கேட்பார்கள்.  தவத்திற்குக் காலமும் வேண்டியதில்லை; திசையும் வேண்டியதில்லை.

அறிவை, விரிவான பிரபஞ்ச இணைப்போடு இணைக்கக்கூடிய ஒரு பயிற்சிதான் தவம். அதற்கு கால நேரம் பார்க்க வேண்டியதில்லை. எந்தக் காலத்திலேயும் செய்யலாம். அதையெல்லாம் உணர்ந்து, நீங்கள் எவ்வளவு தூரம் ஆழ்ந்து தவம் செய்து வருகிறீர்களோ, அந்த அளவுக்கு, விவகாரங்களில் ஏற்படக்கூடிய சிக்கல்களை அறுத்துக் கொள்ளவும், தெளிந்த நிலையிலே அந்தச் சிக்கல்களை தீர்த்துக் கொள்ளவும், சிக்கல் வராமல் காத்துக் கொள்ளவும் வேண்டிய விழிப்பு நிலையை இந்தத் தவம் உங்களுக்குக் கொடுக்கும்.

கிரகணம் எப்படி உண்டாகிறது? அந்த நாட்களில் நோன்பு, தியானம் செய்வது ஏன் ?


சூரியன் வேகமாக சுற்றிக் கொண்டிருக்கிறது. அப்போது heavier elements எல்லாம் நடு மையத்திற்கு சென்றுவிடும் என்று ஓரளவுக்கு எல்லோருக்கும் தெரியும். Particle movement குறைந்தால்தான் ஒன்றோடு ஒன்று நெருங்கி இணைய முடியும்; heavier element ஆக மாறும்.

அப்படி வரும்போது ஒரு குறிப்பிட்ட இடம் வந்தது என்றால் அதற்கு மேலே அசைய முடியாமல் அந்த சுழல் வேகமே நின்று போகிறது. சுழல் வேகமே நின்று போனால் "கரு அணு" என்று சொல்லக்கூடிய Nucleus-க்கு இயக்கமே இல்லை. Nucleus நின்று போய்விட்டால் உடனே அதை சுற்றி வந்து கொண்டே இருக்கும் electron, proton எல்லாம் ஓட ஆரம்பிக்கும். ஓட ஆரம்பித்தால் அதுதான் அணுச்சிதைவு.

அந்த அணுச்சிதைவு ஏற்பட்ட உடனே கரு அணு நின்று போய், அதே போல பக்கத்தில் ஒன்று நின்று போய், இதே மாதிரி கோடான கோடி அணுக்கள் அழிந்தன. அங்கு இருந்த கரு அணு எல்லாம் வெட்ட வெளியாக, அந்த வெட்ட வெளியை "Black-spot in the Sun" என்று சொல்கிறோம். அதாவது சூரியனில் கரும்புள்ளி என்று தோன்றும் வெட்டவெளி.

சூரியனுடைய இயக்கத்தில் வெட்டவெளி நிற்க முடியாது. அதனால் மையத்தில் ஏற்பட்டபோதும் இரண்டு பக்கமும் பீறிட்டுக்கொண்டு வெளியே வந்து பிரபஞ்சமெல்லாம் கடந்து, கோடு போல சென்று சுத்த வெளியோடு கலந்து விடுகிறது. அதனால்தான் அந்த கிரகங்களை எல்லாம் spiritual கிரகங்கள், ஆன்மீக கிரகங்கள் என்று சொல்வது.

ராகு-கேது என்றால் இப்போது விஞ்ஞானிகள் சொல்கிறார்களே Black-hole அதுதான் ராகு-கேது. சூரியனின் நடுமையத்திலிருந்து உற்பத்தி ஆகக்கூடிய அந்த Black-hole இரண்டு பக்கமும் பீறிட்டுக்கொண்டு வந்து எப்போதும் அதை கடந்து கொண்டே இருக்கிறது. அதற்கு நேராக சந்திரன், பூமி, சூரியன் இது மூன்றும் வரும்போது அந்த மறைவு சரியாக வந்து விடும்.

ஒவ்வொரு மாதமும் மூன்றும் ஒன்றாகத்தான் வருகின்றன; கிரகணம் வருவது இல்லை. ராகு-கேது என்ற அந்த Black-hole நேரில் வருகின்றபோதுதான் அந்த மறைவு உண்டாகிறது. உடனே "கிரகணம்" என்று சொல்கிறோம். சூரியனை மறைக்கும்போது நேரடியாக அந்த இடத்தில ராகுவோ கேதுவோ அந்த ஓட்டம் இருக்குமானால், அதன் பெயர் "சூரிய கிரகணம்"; அல்லது பூமி வந்து சந்திரனுடைய ஒளியை மறைக்குமேயானால் அது "சூரிய கிரகணம்".

சந்திரனை பூமி மறைக்கும் போது, அதாவது பூரண சந்திரன் தினத்தில் நடு மையத்தில் பூமி நிற்கும்; அதனால் பூமி சூரியனிலிருந்து வரக்கூடிய வெளிச்சத்தை மறைத்துவிடும். அந்த மறைவு சந்திரன் மேல் படுகின்றது. அதுதான் "சந்திர கிரகணம்". அதுவும் ராகு-கேது என்ற Black-hole-க்கு நேரில் வந்தால்தான் அந்த மறைவு தெரியுமே தவிர மற்றபடி மறைப்பது இல்லை. ஆகையினால் ஒவ்வொரு மாதமும் ராகு பிடித்து விட்டது, இது ஒரு பாம்பு என்று சொல்வார்கள். நீளமாக வருவது எல்லாம் பாம்பு என்று சொல்லிக்கொள்வது நமது வழக்கம். 

இதனால் சூரிய ஒளி, சந்திர ஒளி பாதிக்கப்படும்போது நம் உடலில் உள்ள ரசாயனம் magnetic force வித்தியாசப்படும். அந்த மாறுதல் ஏற்படும்போது நமது உணவு செரிமானமாகின்ற முறை குறைவாக இருக்கிறது. அந்த நேரத்தில் தெய்வீக நினைவு அல்லது வேறு எதாவது சங்கற்பம் செய்வது நல்லதே. அப்படி இல்லாமல் இஷ்டம்போல் சுற்றும்போது உடல் உறவு கொள்ள நேரிடும். அந்த நேரத்தில் விளையக் கூடிய குழந்தை கேடுற்ற உடலும் மனமும் உடையதாக இருக்க கூடும் என்பதை நாமே யூகித்துக் கொள்ளலாம். ஆகவே, இத்தகு விபத்துக்களை தடுப்பதற்காகவே அந்த நாட்களை விரத நாட்களாக ஆக்கி வைத்திருக்கின்றனர்.

கிரகண நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இதனால் உடலினுடைய சக்தி அழிவு இல்லாமல் immunity அப்படியே காப்பாற்றப்படும்.

கிரகணம் முடிந்து குளிப்பது என்பது எப்பொழுதும் குளிப்பது போல்தான். அப்பொழுது குளிக்காமல் போனால் ஒன்றும் இல்லை. தூய்மை வேண்டும் என்று எடுக்கும்போது எதற்குமே குளித்துவிட்டு செய்வது ஒரு சடங்குதான்.

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் 
வெறும் எண்ணம் மட்டும்தானே, நான் என்ன செயலிலா இறங்குகிறேன்? என்று ஒரு தீய எண்ணத்திற்கு இடங்கொடுத்து விடக் கூடாது. விளைவுக்கு அஞ்சி, அந்த எண்ணத்தின் வழி நீங்கள் செயலில் இறங்காமல் இருந்து விடலாம். ஆனால் அந்த தீய எண்ணம் திரும்பத் திரும்ப உங்கள் மனதில் தோன்றிச் செயலாக உருப்பெற உங்களிடத்திலேயே வேட்கையையும், உந்துதலையும் தோன்றச் செய்து, செயலாக மாற்றம் பெற முனையும். எனவே எப்போதும் நல்லவற்றையே எண்ணிக் கொண்டிருக்க வேண்டும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

குரு என்பவர் யார்? எளிய விளக்கம்

பண்டைய காலந்தொட்டே குருவிற்கென்று பக்தி கலந்த மற்றும் தீவிரமான நன்றி உணர்வுடன் கூடிய மரியாதை, பணிவு வழங்கப்படுவது ஏன் ?

வேதம் சொல்கிறது,

குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு
குரு தேவோ மஹேஸ்வரஹ
குரு சாட்சாத் பரப்ரம்மா
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹா. என்று 

ஏன் நம்மை போன்ற ஒரு சாதாரண மனிதருக்கு அவ்வளவு மதிப்பளிக்கப் பட்டுவருகிறது?

அந்த குரு என்பவர் யார்?

  • ஒரு சினிமா நடிகனை எடுத்துக்கொள்வோம். நடிகனுக்கே தனக்குள் இருக்கும் திறமை தெரியாத மயக்க நிலையில், அத்திறமையை சுட்டிக்காடியதோடல்லாமல் அவனை உலகப் புகழ் பெரும் அளவிற்கு உயர்த்திய இயக்குனர் தான் குருவா?(ரஜினி, பாலச்சந்தர்)
  • சாதாரண குடும்பத்தில் பிறந்த Indian film actress Shriya Saran ஐ எடுத்துக்கொள்வோம். தனது நடன ஆசிரியரின் அழைப்பின் பேரில் ஒரு நடன நிகழ்ச்சியில் பங்கேற்றதால் திரை உலகிற்கு எடுத்துக்காட்டப்பட்டு திரையுலகில் மிகப் பிரபலமான  ஷ்ரியாவிற்கு அவரது நடன ஆசிரியரும், இயக்குனரும் குருவோ ?
  • Airtel Junior Super Singer ஐ எடுத்துக்கொள்வோம். முதல் நாள் மிகவும் கஷ்டப்பட்டுப்  பாடும் ஒரு குழந்தை ஒரு Magic போன்று மூன்றே நாட்களில் அனந்த் அவர்களின் Voice training ற்கு பிறகு பிரமிக்க வைக்கும் அளவிற்கு பாடுகிறதே! அவர் தான் குருவா?

நம் நிலையை நாம் உணராத இந்நிலையைதான் ரிஷிகள் மயக்க நிலை என்கிறார்களோ? அதை தெளியவைக்கும் மேதைகளே குரு ஆகிறார்களோ ?

அப்படியானால் நாமும் தூய உள்ளத்துடன் உடன் உறைபவர்களின், உடன் படிப்பவர்களின், உடன் பணிபுரிபவர்களின் திறமையை ஊக்குவித்து அவர்களின் ஆற்றலை அவர்களுக்கும் உலகிற்கும் காண்பித்தால் நாமும் குரு தானோ?

குரு என்பது ஒரு நபரல்ல போலும், ஒருவரின் consciousness ஐ மேல் நோக்கி இழுக்கும் தன்மை போலும். அது சினமா துறையாக இருக்கலாம் இல்லை பக்தி மார்கமாக இருக்கலாம்.

குரு' என்ற சம்ஸ்கிருத வார்த்தைக்கு 'இருளை விலக்குபவர்' என்று பொருள். குரு நம்மிடமுள்ள அறியாமையாகிய இருளை அகற்றி, ஞானோதய மார்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறார்.

குரு என்பவர் சாலை வரைபடம் போல. குருவின் வழிகாட்டல் இல்லாமலும் ஒருவர் தான் போய் சேர வேண்டிய இலக்கை அடையலாம். ஆனால் நீண்ட காலங்கள் அதற்காக செலவிட நேரும். குரு பூர்ணிமா அன்று ஆன்மீக சாதகர்கள் தத்தம் குருமார்களுக்கு நன்றி செலுத்தி அவர்கள் அருளைப் பெறுகிறார்கள். குரு பூர்ணிமா அன்று யோக சாதனை அல்லது தியானத்தில் ஈடுபடுபவர்கள் மிகவும் பயன் பெறுகின்றனர் என்று வேதம் கூறுகிறது.

மனிதனிடம் இறை அருள் எப்படி வெளிப்படுகின்றது

நாம் இறை அருள் வெளிப்பாட்டை பல வகையில் கேள்விப்பட்டிருப்போம்.  விஸ்வரூப தரிசனம், ஒளிவட்டம் etc.  வேறு ஒரு கோணத்தில் இறை அருளை சிந்திப்போம்.  எந்த அடிப்படையில்?

இறை அருளைப்பெற்றவன், கண்டிப்பாக எவ்வழியிலும் கஷ்டப்பட மாட்டான்.  ஆனால் இறை அருளைப் பெறாதவனோ துன்பப்படுவான்.  இதன் அடிப்படையில் தான் உலக சுகங்களை அடைய நாம் இறைவனை நாடுகிறோம் அல்லவா? நம் வேண்டுதல்களை  உற்று நோக்குங்கள்.

சிறுவயதில் - நான் தேர்ச்சி பெற வேண்டும். பின் வேலை கிடைக்க வேண்டும்.

திருமணம் ஆக வேண்டுதல்கள் பல.   பின் சுமுகமான திருமண வாழ்வின் தடைகள் அகல பரிகாரம்.  குழந்தை ...., உடல்நலம் ,....குழந்தையின் கல்வி .....Etc.  இத்தனை வேண்டுதல்களும்  நிறைவேற நாம் இடும் தக்ஷனை ரூபாய் 10 அல்லது 20 .

துன்புருபவன் இறையருள் பெறாதவன், இன்புருபவன் இறையருள் பெற்றவன் அல்லது புண்ணியசாலி என்ற அடிப்படை கருத்தை சிந்தித்தபடி கீழ் வருவனவற்றை ஆராய்வோம். 

இன்புருபவன் இறையருள் பெற்றவன் 

Financial Intelligence உள்ளவர்கள், நிதி சூழ்நிலைகளை திறம்பட கையாண்டு பணம் அவர்களின் திறமையால் பணம் படைத்தவர்களாக உள்ளனர்.

Music Skills உள்ளவர்கள் அவர்களின் திறமையால்   கச்சேரி, தொலைக்காட்சி நிகழ்ச்சி என புகழுடன் உள்ளனர்.

நடிக்கும் திறமை படைத்தவர்கள், அத்திறமையால் உலகப் பிரபலமாகி, புகழுடனும், பணத்துடனும் வாழ்கிறார்கள்.

துன்புருபவன் இறையருள் பெறாதவன்.

திறமை அல்லது பரிட்சயம் இல்லாத ஒரு வாகன ஓட்டியின் அறியாமையால்  தனக்கும் பிறருக்கும் விபத்து நேர்கிறது.

அறிவியல் வளர்ச்சியை அறியாத ஒரு பாமர மனிதனின் அறியாமையால் இன்றும்  இயந்திரங்களின் உதவி கொண்டு எளிமையாக செய்யக்கூடிய வேலையை பழைய முறைகளை பாரம்பரியம் என்ற பெயரில் அறியாமையால் பின்பற்றி காலத்தையும் உடல் உழைப்பையும் வீணாக்கி துன்புறுகிறான்.   பாரம்பரியம் கடைபிடிக்க வேண்டிய  செயல்களை Modern என்ற பெயரில் பின்பற்றாமலும் துன்புறுகிறான்.

உதாரணம்.  Mixie, Grinder பயன்பாடு   மற்றும்  தமிழை தமிழ் நாட்டிற்குள் பேசுவதற்கு தயக்கம். மொழிழ்ப் பயன்பட்டிற்குள் ஒருவனின் வாழ்க்கைத் தரம் Status தாக்கம் குறுக்கிடுவதே அறியாமைதான்.

மருத்துவ வளர்ச்சியை அறியாதவர்கள் நோயினால் துன்பப்படுவது. விதி என்று அறியாமையால் முடங்கி இருப்பது.

ஒருவேலை இறையருள் திறமை சாலிகளுக்கு மட்டும் தானோ?  அல்லது கடினமாக உழைப்பவர்களுக்கு மட்டும் தானோ?

அறிவில்தான் மனிதன் வேறுபடுகிறான் என்பதை ஒப்புக்கொள்ள முடிந்தால், அறிவேதான் இறையருள் என்பது புரியும்.

ஆழமாக சிந்தித்தால் நாம் இறைவனின் அத்தனை பெருமைகளையும் உணர்வதே அறிவால் தான்.

இன்னும் ஆழமாக சிந்தித்தால் அறிவைத் தருவதே இறைவன்   தான்.

 ஒருவேளை நாம் மனநிலை பாதிக்கப்பட்டு பிறந்திருந்தால், இறைவனைக் கூட அறியமுடியாது, எங்கே திறமை அடைவது.

நம்மிடம் உள்ள இறைஅருளை வெளிக்கொணர,  கடினமாக உழைக்கவேண்டும். உழைத்தால் திறமை வரும், வந்தால் இறைவன் அருள் வரும் ...

என்ன Sir இது உழைப்பின்றி இறைவன் அருள் கூட கிடைக்காதா......!

நன்றியுடன் 
பாலாஜி 



அடிப்படை இல்லாத பக்தி அறியாமை

படிக்காமல் தேர்ச்சி பெற வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவது.
முயச்சி செய்யாமல் வேலை கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதல்.

இறைவனின் உருவம் மட்டுமே இறைவன் என்றும் கோயிலில் மட்டுமே அவன் உறைகிறான் என்றும் எண்ணுவது.

உதாரணம் :அன்று சிவன் பாதுகாப்பிற்காக ஈட்டி வைத்திருந்தார் என்றால், இன்று அதைவிட மேலான நவீன ஆயுதம் வேண்டும்.  உருவம் மட்டும் இறைவன் இல்லை..


நான் இறைவனை உண்டாக்கின பெரியோர்களை வணங்குபவன். ஏனென்றால் அடிப்படை சாமான்ய மக்களுக்கு தத்வார்த்தமான விஷயங்களை புரியவைப்பதின் கடினத்தன்மையை நன் உணர்கிறேன்.

அவர்களுக்கு உழைப்பதற்கும், உழைத்தக்  களைப்பில் உறங்குவதற்கும் நடைமுறையில் நேரம் சரியாக இருக்கிறது.

அவர்களும் படைப்பின் மூலத்தை உணர்ந்து அமைதியாகவும் மெய்யறிவுடனும் வாழ  வேண்டும் என்பதே இறைவன்  படைக்கப்பட்டதன் நோக்கம்.  அறியாமையே அனைத்து துன்பத்தின் பிறப்பிடம்.

எல்லாம் நம் முயற்சியால் மட்டும் நடைபெறுகிறது என்பதும் அறியாமை தான்.

விதை விதைத்தால் தான் அறுவடை செய்யலாம் அனால் உலகின் முதல் விதையை விதைத்தவன் யார்?

சமைக்க தெரியாதவனுக்கும் சாம்பார் ஒருநாள் நன்றாக சுவையுடன் அமையலாம்.  அனால் சாம்பார் தினமும் அதே சுவையுடன் அமைய வேண்டும் என்றால் சமையல் அறிவு வேண்டும்.   Ingredients மற்றும் consistency  துல்லியமாக அறிந்திருக்க வேண்டும்.  கண்களை மூடி மந்திரம் ஜெபித்தால் இந்த யுகத்தில் சாம்பார் வராது.  சாம்பார் மட்டும் அல்ல எதுவுமே சாத்தியம் இல்லை.

இந்த படைப்பினை உற்று நோக்கினால் அனைத்தும் Pattern, Precision and regularity அதாவது அமைப்பு, துள்ளியம் மற்றும் இயக்க ஒழுங்கு இன்ற அடிப்படையில் ஒரு நீதியோடு இயங்கி வருகிறது.

நெருப்பு என்றால்எரிதல் , எரித்தல், சுடுதல் சுற்றி பரவுதல் என்பது அதன் இயல்பு மற்றும் இயக்க ஒழுங்கு .  குழந்தை தெரியாமல் தொட்டாலும் சுடும், ஒரு ஞானி தெரிந்து தொட்டாலும் சுடும்.  சுடும் என்ற அறிவே, சுடுதல் என்றபாதிப்பிலிருந்து நம்மை காக்கும்.  

அறியாமை நம்மை எரித்துவிடும்.

இறைவன் செய்யும் செயலின் விளைவாகவே வெளிப்படுகிறான்.  இறைவனின் எல்லையற்ற இயல்பை உணர்ந்தால் வேண்டுதல் என்பதே எழாது.  நாம் வேண்டியதாலா  கடல் உண்டானது,  மலை உண்டானது ?  காலத்தால் மாற்றம் அடைவதே நன்மையையும் தீமையும்.

துன்பம் இன்பம் என்பது தனிமனித அனுபவமே.  பேருந்தின் கடைசி இருக்கை நமக்கு நரகம் அனால் கல்யாணம் ஆன புது தம்பதியர் சொர்க்கம் என்று கருதலாம். பேருந்தின்  ஒவ்வொரு வளைவிலும் இன்பமான அனுபவன்கள்.

அடிப்படையை உணர அமைதி வேண்டும். அமைதிக்கு ஒழுக்கம் வேண்டும். 

அறிவே இறைவன்.

By,
Balaji











அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கப்பாலாய்…-- இறைவன்

எந்த ஒரு பொருளினுள்ளும் புரோட்டன், நியூட்ரான் மற்றும் எலக்ட்ரான்களே இயக்க நிலையிலோ அமைதி நிலையிலோ உள்ளன.

நம் உடலினுள்ளும் அதே அணுககூட்டமைப்பே உள்ளன.

அப்படியானால் நாமும் எல்லா பொருள்களும் ஒன்றா?

அணுக்களின் மாறுபட்ட இயக்கம் மற்றும் மோதுதலால் ஒலி மற்றும் ஒளி  உண்டாகிறது.  உதாரணம் Microwave Oven.

எலக்ட்ரானின் ஓட்டமே மின்சாரம்.

பெரும்பாலான எல்லாவற்றையும் மின்சாரம் தான் இயக்குகிறது என்றால் இறைவன் தான் அந்த மறைந்துள்ள மறை பொருளா?

அணுக்களின் சுழற்சி விசையால் உருவாகும் ஈர்ப்புவிசையே காந்தம்.

மின்காந்த விசை அணுக்களால் விளைகிறது. மனித ஆவிகளை (Gost) அல்லது உயிரை Electro Magnetic Rays Detector மூலம் கண்டறிகிறார்களே ! உடலில்லா உயிரும் அணுக்களின் தொகுப்பா?

மனித உயிரும் இறைவனும் ஒன்றா ? அப்படியானால் செய்யும் செயலின் விளைவால் உண்டான பதிவினால் மட்டும் தான் மனிதன் வேறுபடுகிறானா?

உண்ணும் உணவும், அதை உருவாக்கின மரம், செடி, கொடிகளும் அணுக்களே 

அதை உண்டு வளரும் உடலும், அதனுள் உறையும் உயிரும் அணுக்களே

காற்றில்லா  இடத்திலும் நுழைந்த, ப்ரம்மாண்டம் முழுவதும் நிறைந்த ஈதறிக் பார்டிக்கள் முழுவதும் அணு.

நீரும் அணுகூட்டமைப்பே , அணுவின் இடைவெளியுடன் கூடிய இயக்கமே காற்று.   மோதுதலால் வெப்பம் மேலும் அதிர்வதால் ஒலி.

இதனால் தான் அபிராமி அந்தாதியில் அணுவிற்கும் அணுவாய் என்று குறிப்பிட்டனரோ ?

அதனால் தான் விஷ்ணுவின் பெயர் விஷ்ணும் (எல்லாம் ) என்று ஆனதோ ?

செய்யப்படும் யக்ஞம் நான் தான்.  எதனால் செய்யப்படுகிறதோ அந்த பொருள்களும் நான் தான்.அதை அனுபவிப்பவனும் நானே, செய்பவனும் நானே. அதனால் விளையும் பயனும் நானே.

உலகில் வெற்றி தோல்வி என்பதே கிடையாது. விளைவு (Result and Consequence) மட்டும் தான் உண்டு.

இந்த விளைவுதான்  இறைவனா?

Witten By 
Balaji. 




 

கையில் காப்புக்கயிறு கட்டுவது ஏன்?


நம் உடலில் பல்வேறு முடிச்சுகள் இருக்கின்றன.ஒவ்வொரு முடிச்சுகளும் உடம்பின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துகின்றன அந்த வகையில் கையில் இருக்கும் முக்கிய முடிச்சு பகுதி நம்முடைய மணிக்கட்டு ஆகும்.

இந்த இடத்தில்தான் இதயத்தின் இயக்க தன்மையை அறிந்துகொள்வதற்க்காக நாடி பிடித்து பார்ப்பார்கள்.நம்முடைய எண்ணங்கள் மற்று மனநிலையின் அடிப்படையிலேயே நாடியின் செயல் பாடும் அமைகிற்அது.

நம்முடைய மணிக்கட்டு இடத்தில் கயிறு கட்டினாலும் அல்லது காப்பு போடுவதாலும் நாடியின் இயக்கம் சீராகிறது.எண்ணங்களும்,மனநிலையும் அலைபாயாமல் இருக்கும்.

பெரும்பாலனவர்கள் மஞ்சள்,கறுப்பு,சிவப்பு நிறங்களில் கயிறுகட்டுவார்கள் மேலும் செம்பு,வெள்ளி,தங்கம்,ஐம்பொன்னில் காப்பு செய்து போட்டுகொள்வார்கள் இது சிறப்பானதாக இருந்தாலும் பட்டு, தர்ப்பை, அருகம்புல் போன்றவை பிரஞ்ச சக்திகளையும்,நவக்கிரக கதிர் வீச்சுகளையும் ஈர்க்கும் தன்மை கொண்டவை அதானால் இவைகளை நூல்களாக தரித்து கைகளில் அணியலாம்.

ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் அணிய வேண்டும். 

சிவ லிங்கம் பற்றி ரஷ்ய விஞ்ஞானியின் ஆராய்ச்சியில் கிடைத்த முடிவு.

சிவலிங்கங்கள்ப் பற்றிய டாக்டர் “விளாதி மீரின்” என்பவரின் ஆராய்ச்சி மிக வித்தியாசமானது. அது இந்த பூமியில் மொத்தம் எத்தனை லிங்கங்கள் உள்ளன என்று எண்ணிப் பார்க்கவோ, இல்லை அவற்றின் பூர்வ புராணக் கதைகளை அறியவோ முயலவில்லை. இவற்றுக்கப்பால் சிவலிங்கங்கள் பற்றி நாம் யோசிக்கவும் அதை நாம் நேசிக்கவும் நிறைய அடிப்படைகள் இருப்பதாக டாக்டர் விளாதிமீர் கருதினார். 

அதில் முதலாவது, ஸ்தூல வடிவங்களில் இறை உருவங்களை உருவாக்கி வழிபாடு செய்யும் இந்து மதத்தில் ஒரு குழவிக் கல்லைப் போன்ற, லிங்கம் என்னும் உருவமற்ற ஒரு உருவம் எப்படி உட்புகுந்தது என்பதுதான். உண்மையில் லிங்க சொரூபமானது மூன்று மதத்திற்கும், புத்த ஜைனர்களுக்கும் கூட பொதுவானது என்பதையும் அவர் கண்டுபிடித்தார். 
ஒரு மலை உச்சி! அதில் பௌர்ணமி இரவில் கரிய நிழல் உருவாய் கண்ணுக்குத் தெரிந்த லிங்க உருவத்தை ஒரு கிருத்தவன் சிலுவைச் சின்னமாகப் பார்த்தான். ஒரு இஸ்லாமியன் தங்களின் மசூதிக் கூரை தெரிவதாக கருதினார். புத்த ஜைன சன்யாசிகள் தங்கள் குருமகாங்கள் அமர்ந்து தவம் செய்து கொண்டிருப்பதாகக் கருதினார்கள். ஒரு இந்துவோ அது சிவலிங்கம் என்று திடமாக கருதி இருந்த இட்த்தில் இருந்தே வில்வ இலைகளை வாரி வாரி அர்ச்சித்தான். உருவம் ஒன்று. ஆனால் அனைத்து மார்க்க தரிசிகளையும் அது திருப்திப்படுத்தியது என்றால் சிவம்தான் முதலும் முடிவுமான அனைவருக்கும் பொதுவான இறை ஸ்வரூபமா? டாக்டர் விளாதிமீர் இப்படிதான் கேட்கிறார். மேலும் அவர் புராணங்களிலும், இதிகாசங்களிலும் சிவம் பற்றி சொன்னதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. லிங்க உருவம் பற்றி யாரும் சரியாக உணரவில்லை என்பதுதான் அவரது கருத்து. 

ஒரு ரஷ்ய நாட்டுப் பிரஜையாக இருந்தாலும் சிவலிங்க சொரூபம் அவருக்குள் ஆழமான பாதிப்புகளை உருவாக்கியதாக அவர் கூறுகிறார். லிங்கம், சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம் என்று கணித வடிவங்கள் அவ்வளவையும் தனக்குள் கொண்டிருப்பதாகவும், ஒவ்வொரு கோணத்தில் இருந்து பார்க்கும்போதும் ஒருள் பொருள் தருவதாகவும் இருக்கிறது என்பது அவர் கருத்து. குறிப்பாக அணு தத்துவம் சிவலிங்க சொரூபத்துக்குள் விலாவரியாக இருக்கிறது. லிங்கத்தைப் பயன்படுத்தத் தெரிந்தால், அது மழை தரும், நெருப்புத் தரும், காற்று தரும் கேட்ட எல்லாம் தரும், என்றும் நம்புகிறார். அப்படி என்றால் சிவமாகிய லிங்க ஸ்வரூபம் என்பது மானுடர்கள் பயன்படுத்தத் தெரியாமல் வைத்திருக்கும் மகத்தான ஒரு எந்திரமா? டாக்டர் விளாதிமீரின் சிவஸ்வரூப ஆராய்ச்சியில் ஒரு ஆச்சரியமூட்டும் தகவல் ஒன்றும் அவருக்குக் கிட்டியதாம். 

இந்த மண்ணில் பூமிக்கு மேலாக கண்ணுக்குத் தெரியும் விதத்தில் உள்ள லிங்க ஸ்வரூபங்கள் இல்லாமல் பூமிக்குள் புதைந்து கிடக்கும் ஸ்வரூபங்களும் ஏராளமாம்! அதுவே அவ்வப்போது ஸ்வயம்பு மூர்த்தியாய் வெளிப்படுகிறதாம். ஸ்வயம்பு மூர்த்தங்களின் பின்புலத்தில் பஞ்சபூத சக்திகளின் இயக்கம் ஒரு சீராகவும், ஆச்சரியம் ஊட்டும் விதத்தில் ஒன்றோடொன்று பின்னிப்பினைந்த கூட்டுறவோடும் செயல்படுகிறதாம். சுருக்கமாகச் சொன்னால், அந்த மூர்த்தங்களைப் பஞ்ச பூதங்கள் ஆராதிக்கின்றன என்பதே உண்மை என்கிறார். இப்படிப்பட்ட ஆராதனைக்குறிய இடங்களில் கூர்ந்து கவனித்தபோது பஞ்ச பூதங்களும் சம அளவிலும் அத்துடன் சீரான இயக்கத்துடனும் அவை இருக்கின்றன. மனித சரீரத்திலும் பஞ்ச பூதங்கள் உள்ளன. இவை சுயம்புலிங்க ஸ்தலங்களில் இயற்கையோடு கூடிச் செயல்படுகின்றன என்கிறார். அதாவது சுயம்பு மூர்த்தி உள்ள ஸ்தலங்களில் வாழும் மனிதர்களே அந்த மண்ணுக்கான மழை. காற்று, அக்கினி மண்வளம் ஆகியவைகளைத் தீர்மானிக்கிறார்கள் என்று கூறும் விளாதிமீர், மதுரை போன்ற சுயம்புலிங்க ஸ்தலங்களில் கூடுதலான மழை அல்லது குறைவான மழைக்கு அங்கு வாழும் மக்களின் மனநிலையே காரணமாகிறது என்கிறார். சுயம்பு லிங்கங்கள் உள்ள மண்ணில் வாழும் மக்கள் மனது வைத்தால் அங்கே எதை வேண்டுமானாலும் உருவாக்கிட இயலும் என்றும் கூறுகிறார்!. 

இந்த பூமியானது சூரியன் உதிர்ந்த ஒரு சிறிய அக்னித் துளி என்கிறது விஞ்ஞானம். மெல்லக் குளிர்ந்த இதில் அடுக்கடுக்காய் உயிரினங்கள் தோன்ற ஆரம்பித்தன. அந்த உயிரினங்கள் உயிர் வாழத் தேவையான அனைத்தும் கூட அப்போது தோன்றின. இதுதான் பல கோடி ஆண்டுகளைக் கண்டு விட்ட இந்த பூமியின் சுருக்கமான வரலாறு. மாற்றம் என்பதே இந்தப் பூமியில் மாறாத ஒன்றாக என்றும் இருப்பது. அந்த மாற்றங்களால் வந்ததே இந்த மனித சமூகம். இதன் நடுவே மிக மாறுபட்ட கருத்துகளுடன், நமக்கிருக்கும் அறிவாற்றலால் நம்பமுடியவில்லை என்று ஒரு வார்த்தையில் கூறும் விதமாய் இருப்பதே மதப் புராணங்கள்.

இதில் புராணவழி அறியப்பட்ட சிவமானது தனித்து நிற்கிறது. “புராணம், விஞ்ஞானம் இரண்டையும் கடந்து மூன்றாவதாய் ஒன்றும் உள்ளது. அதுதான் நான்! மானுடமே முடிந்தால் என்னைப் புரிந்துகொள் என்பதுபோல் இருக்கிறது அது” என்கிறார் டாக்டர் விளாதிமீர்! இ ந்த பூவுலகில் சிவம் தொடர்பான அடையாளக் குறியீடுகள் பாரத மண்ணில் மட்டுமன்றி ஆப்பிரிக்கா, ஐரோப்பா முதலிய கண்டங்களில் கூட இருக்கிறது என்பது டாக்டர் விளாதிமீரின் கருத்து. அமெரிக்காவில் “ கிராண்ட் கன்யான் “ என்னும் வித்தியாசமான மலைப் பகுதியில் பராசக்தியின் அம்சங்கள் என்று வர்ணிக்கப்படும் “ சிவம், விஷ்ணு, பிரம்மன் “ மூன்றின் அடையாள உருவங்கள் காணப்படுகின்றனவாம். ஆயினும் இந்திய மண்ணில் மட்டும் சிவம் தொடர்பான சிந்தனைகளும் சைவம் என்கிற ஒரு பிரிவும் உருவாக ஆழமான ஒரு காரணம் இருப்பதாக விளாதிமீர் கருதுகிறார்.

உலகின் உயர்ந்த சிகரமான இமயம் பூகோள ரீதியில் பூமியின் மையத்தில் {கிட்டதட்ட} காணப்படுகிறது. அதன்படி பார்த்தால் இந்த உலகே கூட சிவலிங்க சொரூபம் எனலாம். ஒரு வட்டத்தில் இருந்து கூம்பு முளைத்தது போல் உலகமே ஆவுடையராகத் திகழ இமயம் சிவஸ்தம்பமாக எழும்பி நிற்கிறது. அங்கே பஞ்ச பூத ஆராதனையாக குளிர்ந்த காற்றும் உறைந்த பனியே நீராகவும், அதன் முற்றிய குணமே நெருப்பாகவும் இருக்கிறது. ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட வெளி வேறு எங்கும் காணப்படாத விதத்தில் தூயதாக எல்லாவித கதிர் வீச்சுக்களையும் காணப்படாததாகக் திகழ்கிறது. இங்கே உயிராகிய ஜீவன் மிகச் சுலபமாக சிவத்தை அடைந்து விட {அ} உணர்ந்து விட ஏதுவாகிறது. அதனாலேயே இங்கே ஞானியர் கூட்டம் அதிகம் இருக்கிறது என்பதும் அவரது கருத்து! 

இந்த ரஷ்ய விஞ்ஞானி சொன்ன விஷயங்கள் எதுவும் எந்த விஞ்ஞானியும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. {இது எத்தனை பேருக்கு தெரியும்? அவசியம் பகிரவும்...}

தானங்களால் ஏற்படும் பலன்கள்

தானம் என்பது வேறு தர்மம் என்பது வேறு.அதாவது தர்மம் என்பது தனக்கு தெரிந்த விசயங்களை அடுத்தவருக்கு கூறி நல்வழிக்காட்டி அவரை வாழ்வில் உயர்த்துவது தர்மம் ஆகும்.தானம் என்பது தனக்கு தேவைக்கு மீறிய செல்வங்களை இலவசமாக கொடுப்பது.

1.ஆடைகள் தானம்: 
ஆயுள் விருத்தியாகும்.புத்திர தோசம் விலகும்.அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று.வியாழக்கிழமையன்று ஆடைதானம் செய்வதால் பெண்களிடம் நல்லுறவும், சுக போக பாக்யவிருத்தியும்,உடல் வலிமையும் உண்டாகும்.

2.தேன் தானம்:
புத்திர பாக்யம் இல்லாதவர்கள், கர்ப்பப்பை வலிமை இல்லாதவர்கள், வெண்கலப்பாத்திரத்தில் தாரா பலன் உள்ள நட்சத்திரத்தன்று( இதை அறிய உங்கள் ஆஸ்தான ஜோதிடரை அணுகவும்) சுத்தமான தேனை தானம் செய்ய வேண்டும்.

3.நெய்தானம்:
பாவக்கிரக திசை நடப்பவர்கள்(6,8,12 ஆம் அதிபதியின் திசை).நோய் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வெண்கலக் கிண்ணத்தில் சுத்தமான நெய் தானம் செய்ய வேண்டும்.சகலவிதமான நோய்களும் தீரும்.

4.தீப தானம்:
இஷ்ட தெய்வ சன்னதியில் மாதம் ஒருமுறை 10 தீபம் ஏற்றினால் கண் கோளாறுகள் தீரும்.அல்லது ஏழை,எளியவர்களுக்கு மின்விளக்கு வசதி செய்து கொடுத்தால் பார்வைத்திறன் எப்போதும் பாதுகாக்கப்படும்.

5.அரிசிதானம்:
பூர்வ ஜென்ம தோஷங்கள், தெரிந்தும் தெரியாமலும் செய்தவை விலக ஏழை அல்லது வாழ்வில் நலிந்தவர்களுக்குஅரிசி தானம் செய்யவேண்டும்.யாருக்கு வீடு வாசல் இல்லையோ அவர்களுக்கு தானம் செய்தால் தான் நாம் தானம் செய்த பலன் நமக்கு உணடாகும்.

6.கம்பளி-பருத்தி தானம்:
வாயு சார்ந்த நோய் உள்ளவர்கள் வயது முதிர்ந்தவர்களுக்கு கம்பளிதானம் செய்தால் நோய் தீரும்.வெண்குஷ்டம் அறிகுறி தென்பட்டால் பருத்திதானம் (பருத்திஉடைகள்) செய்து அதிலிருந்து மீண்டுவிடலாம்.

THREE-BITE PRACTICE

THREE-BITE PRACTICE

"You can do this anytime you eat a meal. Before taking the first bite, just pause and think of those men and women of wisdom and mentally offer them your food. In this way, you connect with the virtue of devotion.

Before taking the second bite, pause and offer your food to all those who’ve been kind to you. This nurtures the virtues of gratitude and appreciation. The third bite is offered to those who are suffering: all the people and animals who are starving, or being tortured or neglected, without comfort or friends. Think, too, of all of us who suffer from aggression, craving, and indifference. This simple gesture awakens the virtue of compassion.

In this way—by relying on our teachers, our benefactors, and those in need—we gather the virtues of devotion, gratitude, and kindness."
(From Pema's book No Time To Lose)

Compassion and the Nature of Mind

If someone were to hit us over the head with a stick, we wouldn’t get angry at the stick. We’d get angry at the person who hit us. And in the same way, if our partner expresses anger towards us, we shouldn’t get angry at our partner, because they are under the sway of disturbing emotions and the ignorance toward the true nature of things that is the root of that anger. 

So thinking in this way, we can gear our response in a fresh way, from a more positive angle and see these moments of anger as opportunities... to shift the trajectory of the relationship in a more positive way. 

If we can do that, if we can respond in new ways like that, then I think we can really stand a chance of transforming our relationship in a positive way.

"Compassion and the Nature of Mind" Teachings at Hunter College, NYC - June 29, 2011

தியானம்

தியானம் செய்வதால் உலகில் போர் எழாமல் காக்க முடியுமா!, அது எப்படி? ஆறு தீய குணங்கள் மனிதனிடம் இல்லாமல் இருந்திருந்தால், மகாபாரதம் என்ற மாபெரும் போர் நடந்தே இருக்காது. 1. பேராசை 2. சினம் 3. கடும்பற்று 4. முறையற்ற பால் கவர்ச்சி 5. உயர்வு தாழ்வு மனப்பான்மை 6. வஞ்சம் என்ற ஆறு தீய குணங்களை, மகாபாரத கதையில் இருந்து நீக்கிப்பாறுங்கள், போர் உருவாக வாய்ப்பே இருந்திருக்காது. ஒரு மனிதன் தவறு செய்கிறான் என்றால், அதற்க்கு தூண்டுதலாக இந்த ஆறு குணத்தில் ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட இந்த தீய குணம்தான் காரணமாக இருக்கும். இந்த ஆராய்ச்சியை சாதாரண அறிவு உடையவர்கள் கூட செய்யலாம். உங்களை சுற்றயுள்ள ஏதோ ஒரு சமுதாய சிக்கலையோ அல்லது குடும்ப சிக்கலையோ எடுத்துக்கொண்டு இந்த ஆராய்ச்சியை நீங்களே நடத்தி பார்க்கலாம். அல்லது மகாபாரத கதையிலயே இந்த ஆராய்ச்சியை செய்து பார்க்கலாம். இந்த ஆறு தீய குணங்களும் மனிதனுக்கு எந்த மன நிலையில் எழுகிறது என்று சிந்தித்தோமானால் அது உணர்ச்சிவயப்பட்ட மன நிலையில் (at high mind frequency) தான் உருவாகிறது என்பது தெளிவாகும். மனம் அமைதி நிலையில் இருக்கும் பொழுது இந்த தீய குணங்கள் எழ வாய்ப்பே இல்லை. ஒரு மனிதன் ஏன் உணர்ச்சிவயப்பட்ட நிலைக்கு தள்ளப்படுகிறான்? பெரும்பாலும் பழக்கத்தின் காரணமாகவும், ஒரு சில நேரங்களில் தேவை மற்றும் சூழ்நிலையின் காரணமாகவும் அவன் உணர்ச்சிவயப்பட்ட நிலைக்கு தள்ளபடுகிறான். ஏற்கனவே பலமுறை உணர்ச்சிவயப்பட்டு, நாம் அந்த நேரத்தில் என்னென்ன நினைத்தோமோ, எந்த எந்த செயல் செய்தோமோ, அந்த செயலினால் என்ன என்ன விளைந்ததோ, அனைத்தும் நம்மில் பதிவாகி விடுகிறது, மீண்டும் அதே மன அலைச்சுழல் (Mind frequency) வரும் பொழுது, முன்பு என்ன என்ன அந்த அலைசுழலில் பதிந்ததோ, அனைத்து எண்ணங்களும், செயல்களும் அவன் மூலம் வெளியாகும். இதற்கு உதாரணம், நாம் பல நேரங்களில் தவறு என்று தெரிந்தும் கூட, சில காரியங்களை செய்து துன்பப்படுவோம். இதுதான் பழக்கம். மனிதன் எப்பொழுதும் பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் நடுவில் போராடிக்கொண்டே இருக்கிறான். பெரும்பாலும் பழக்கமே வெற்றி அடைகிறது. ஏனென்றால் பழக்கபதிவு விளக்கபதிவை விட வலிமையாக இருப்பதே இதற்க்கு காரணம். இது போன்று பழக்கத்தின் வழியே மீண்டும் மீண்டும் தவறு செய்யாமல் இருக்க மனதிற்கு ஒரு விழுப்பு நிலை வேண்டும். மனதின் அலைச்சுழலை குறைத்து மனதை அமைதி நிலைக்கு கொண்டு வர வேண்டும், அந்த அமைதி நிலையில் நிலைக்க வேண்டும். இந்த தகமை அனைத்தும் ஒருவர் தியானம் செய்துவர படிப்படியாக கிடைக்கும். மனதின் அலைச்சுழல் அதிகமானால் தானே, அந்த அலைச்சுழலில் பதிந்துள்ள தீய குணங்கள் வெளிவரும். ஒருவர் தியானம் பழக பழக, அவருக்கு மனதை எந்த சூழ்நிலையிலும் அமைதி நிலையில் வைத்திருக்கும் தகமை இயல்பாக வந்துவிடும். இது போன்ற மாற்றம் மனித மனங்களில் உருவாகுமானால், ஆறு தீய குணங்களுக்கு வாய்ப்பே இல்லை. இந்த ஆறு தீய குணங்கள் இல்லாமல் போனால், போர் மட்டும் அல்ல இந்த உலகத்தில் நாம் காணும் எந்த வித குற்றமும் நடக்க முடியாது. இதுவே மனித சமுதாயத்தில் நிலையான அமைதியை பெற்றுத்தரும். அவ்வளவு மதிப்புடையது தியானம். https://m.facebook.com/groups/194749033908852?view=permalink&id=688656667851417

உங்கள் மனமானது, மற்றவர்களின் குறைபாடுகளை பற்றி நினைத்து பாதிக்கப்படுகிறது.

உங்கள் மனமானது, மற்றவர்களின் குறைபாடுகளை பற்றி நினைத்து பாதிக்கப்படுகிறது. மற்றவர்களின் குறைபாடுகளை அவர்களிடமே விட்டுவிடுங்கள், அவர்களே அவற்றை கையாளட்டும். நீங்கள், உங்கள் மனதை கையாளுங்கள். நீங்கள் உங்களது சொந்த குறைபாடுகளை கையாளுங்கள் அதுவே போதுமானது.

ஞானம்

விதை, நிலம், எரு, தண்ணீர், காவல் இவைகள் அனைத்தும் சரியாக இருந்தால் தான் விளைவு நன்றாக இருக்கும். அதுபோலவே, ஒரு ஆசான் அத்துவிதத் தத்துவம் என்ற ஒருமைத் தத்துவ விதையை உன்அறிவு என்னும் நிலத்தில் ஊன்றினால் அது வளர்ச்சி பெற, நீ ஒழுக்கம் என்ற உரம் இடவேண்டும். அறிவை ஒன்றிப் பழகும் ஒருமைப் பழக்கமான தவமும் - ஆராய்ச்சியும் என்ற தண்ணீரும் பாய்ச்ச வேண்டும்.

அறிவை ஒன்றச் செய்து உறுதியான, அசைவற்ற நிலையடைவதே ஞானத்திற்குத் தேவையாக இருக்கிறது.

ஆகையால், அறிவு சலனப்பட்டுக் காமம், குரோதம், கோபம், மோகம், மதம், மாச்சரியம் என்னும் ஆறு குணங்களில் எதுவாயும் மாறாது பார்த்துக் கொள்ளும் விழிப்பு நிலையாகிய காவல் புரிய வேண்டும்.

இவைகள் எல்லாம் அமையும் வகைக்கும் அளவிற்கும் ஏற்றபடி "ஞானம்" என்ற விளைவும் உனக்கு உண்டாகும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

மங்கள ஆரத்தி

தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது, ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை.

சாதாரண நிகழ்வாக இதை புறக்கணிக்கிறோம். ஆனால் இதில் ஆழமான அர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது. இதில் முக்கியமான கருத்துகள் மறைந்துள்ளது.

தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள், மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண் ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு சுற்றும் 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூறுகின்றோம்.

ஒவ்வொரு மனிதனைச் சுற்றிலும் ஆரா (aura ) என்ற சூட்சுமப் பகுதி இருக்கிறது.

மனிதனுக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் அவனைச் சேரும் தீய கிருமிகள் ஆகியவை அந்த சூட்சும பகுதியில் முதலில் பதிந்து பின்னரே அவனுள் புகுகின்றன. திருமணம், குழந்தை பெறுதல், வெற்றியடைதல் ஆகியவற்றால் பலருடைய திருஷ்டி- மணமக்கள், தாய்-சேய், வெற்றியாளர் மீது அதிகம் விழவாய்ப்பு கூடுதலாக உள்ளது.

மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறனுண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம்.

அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம். ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ அணுக்களை அழித்து நம் நலன் பேனுவதோடு பிறருக்கும் அந்த விஷகிருமிகள் பரவாது தடுக்கிறது.வீட்டினுள் நுழையும் முன்பே 'ஆரா' சரீரத்தில் சேர்ந்துள்ள திருஷ்டி மற்றும் கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்திய பின்னரே சம்பந்தப்பட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போகும் வழக்கம் உள்ளது.

எனவே அது போல் ஆரத்தி எடுக்கும் போது பொருள் அறிந்து சரியான பாவனையுடன் செய்வது முக்கியம். அப்போது தான் அதன் பலனும் முழுமையாக இருக்கும்.