தவம்/Meditation


தீட்டா' அலையிலும், 'ஆல்பா' அலையிலும் விழிப்பு நிலையிலேயே இருக்கப் பழகிக் கொண்டோமானால், மற்றவர்களுடைய எண்ண அலைகள் தீமை விளைவிப்பனவாக இருந்தாலும், உணர்ச்சிக்கு ஊக்கம் கொடுப்பவையாக இருந்தாலும் அவை நம்மைப் பாதிக்கா.


உதாரணமாக நான்கு வானொலி நிலையங்கள் நான்கு விதமான வேறு பட்ட நிகழ்ச்சிகளை ஒரே நேரத்தில் ஒளிபரப்புகின்றன. நம் ரேடியோவை எந்த அலை நீளத்தில் வைக்கிறோமோ அது மாத்திரம் தான் கேட்கும். மற்றவை எல்லாம் வந்து மோதும்; ஆனால் கேட்காது. அது போலவே, தேவையற்ற அலைக் கழிப்பும் பாதிப்பும் இல்லாமல் விட்டு விலக  எந்த நிலையில் இருக்கிறோமோ அந்த நிலைக்கு ஏற்ப நமக்கு என்ன தேவையோ அது கிடைக்கும். நாம் என்ன செய்ய வேண்டுமோ அதை நினைப்போம். நாம் என்ன நினைக்கிறோமோ அதைச் செய்ய முடியும் என்ற அளவிலே மனிதத் திறமை வெளிப்படுகிறது. 


இந்த மனிதத் திறமை அதிகரிக்க அதிகரிக்க என்ன ஆகும்? நாம் எங்கு போனாலும், நமக்காக மற்றவர் தாமாகவே அந்த அலையிலேயே கட்டுப்பட்டு, நம் மதிப்பை உணர்ந்து புரிந்து கொள்ள அவர்களுக்கு எண்ணம் தோன்றும். எங்கே போனாலும் நமக்கு வெற்றியாகவே இருக்கும்.

அப்படி எங்கேயாவது வெற்றி இல்லாமல் தடை ஏற்பட்டாலும், அந்தத் தடையினால் நமக்குக் கெடுதல் இல்லை. "நம்மைத் திருப்பி விடுவதற்காக இந்த அலை நீளத்தில் தேவையில்லாதவற்றைத் தள்ளி விடுகிறது. அதனால் அந்த வேலை நடக்கவில்லை" என்று எண்ணி அமைதி அடைந்தால், எந்தக் காலத்தில் எந்த சூழ்நிலையில் அந்த வேலை நடக்க வேண்டுமோ அது தானாகவே நடந்துவிடும்.

"படிக்கும்போது தவம் செய்யலாமா; இரவில் செய்யலாமா?" என்றெல்லாம் கேட்பார்கள்.  தவத்திற்குக் காலமும் வேண்டியதில்லை; திசையும் வேண்டியதில்லை.

அறிவை, விரிவான பிரபஞ்ச இணைப்போடு இணைக்கக்கூடிய ஒரு பயிற்சிதான் தவம். அதற்கு கால நேரம் பார்க்க வேண்டியதில்லை. எந்தக் காலத்திலேயும் செய்யலாம். அதையெல்லாம் உணர்ந்து, நீங்கள் எவ்வளவு தூரம் ஆழ்ந்து தவம் செய்து வருகிறீர்களோ, அந்த அளவுக்கு, விவகாரங்களில் ஏற்படக்கூடிய சிக்கல்களை அறுத்துக் கொள்ளவும், தெளிந்த நிலையிலே அந்தச் சிக்கல்களை தீர்த்துக் கொள்ளவும், சிக்கல் வராமல் காத்துக் கொள்ளவும் வேண்டிய விழிப்பு நிலையை இந்தத் தவம் உங்களுக்குக் கொடுக்கும்.

கிரகணம் எப்படி உண்டாகிறது? அந்த நாட்களில் நோன்பு, தியானம் செய்வது ஏன் ?


சூரியன் வேகமாக சுற்றிக் கொண்டிருக்கிறது. அப்போது heavier elements எல்லாம் நடு மையத்திற்கு சென்றுவிடும் என்று ஓரளவுக்கு எல்லோருக்கும் தெரியும். Particle movement குறைந்தால்தான் ஒன்றோடு ஒன்று நெருங்கி இணைய முடியும்; heavier element ஆக மாறும்.

அப்படி வரும்போது ஒரு குறிப்பிட்ட இடம் வந்தது என்றால் அதற்கு மேலே அசைய முடியாமல் அந்த சுழல் வேகமே நின்று போகிறது. சுழல் வேகமே நின்று போனால் "கரு அணு" என்று சொல்லக்கூடிய Nucleus-க்கு இயக்கமே இல்லை. Nucleus நின்று போய்விட்டால் உடனே அதை சுற்றி வந்து கொண்டே இருக்கும் electron, proton எல்லாம் ஓட ஆரம்பிக்கும். ஓட ஆரம்பித்தால் அதுதான் அணுச்சிதைவு.

அந்த அணுச்சிதைவு ஏற்பட்ட உடனே கரு அணு நின்று போய், அதே போல பக்கத்தில் ஒன்று நின்று போய், இதே மாதிரி கோடான கோடி அணுக்கள் அழிந்தன. அங்கு இருந்த கரு அணு எல்லாம் வெட்ட வெளியாக, அந்த வெட்ட வெளியை "Black-spot in the Sun" என்று சொல்கிறோம். அதாவது சூரியனில் கரும்புள்ளி என்று தோன்றும் வெட்டவெளி.

சூரியனுடைய இயக்கத்தில் வெட்டவெளி நிற்க முடியாது. அதனால் மையத்தில் ஏற்பட்டபோதும் இரண்டு பக்கமும் பீறிட்டுக்கொண்டு வெளியே வந்து பிரபஞ்சமெல்லாம் கடந்து, கோடு போல சென்று சுத்த வெளியோடு கலந்து விடுகிறது. அதனால்தான் அந்த கிரகங்களை எல்லாம் spiritual கிரகங்கள், ஆன்மீக கிரகங்கள் என்று சொல்வது.

ராகு-கேது என்றால் இப்போது விஞ்ஞானிகள் சொல்கிறார்களே Black-hole அதுதான் ராகு-கேது. சூரியனின் நடுமையத்திலிருந்து உற்பத்தி ஆகக்கூடிய அந்த Black-hole இரண்டு பக்கமும் பீறிட்டுக்கொண்டு வந்து எப்போதும் அதை கடந்து கொண்டே இருக்கிறது. அதற்கு நேராக சந்திரன், பூமி, சூரியன் இது மூன்றும் வரும்போது அந்த மறைவு சரியாக வந்து விடும்.

ஒவ்வொரு மாதமும் மூன்றும் ஒன்றாகத்தான் வருகின்றன; கிரகணம் வருவது இல்லை. ராகு-கேது என்ற அந்த Black-hole நேரில் வருகின்றபோதுதான் அந்த மறைவு உண்டாகிறது. உடனே "கிரகணம்" என்று சொல்கிறோம். சூரியனை மறைக்கும்போது நேரடியாக அந்த இடத்தில ராகுவோ கேதுவோ அந்த ஓட்டம் இருக்குமானால், அதன் பெயர் "சூரிய கிரகணம்"; அல்லது பூமி வந்து சந்திரனுடைய ஒளியை மறைக்குமேயானால் அது "சூரிய கிரகணம்".

சந்திரனை பூமி மறைக்கும் போது, அதாவது பூரண சந்திரன் தினத்தில் நடு மையத்தில் பூமி நிற்கும்; அதனால் பூமி சூரியனிலிருந்து வரக்கூடிய வெளிச்சத்தை மறைத்துவிடும். அந்த மறைவு சந்திரன் மேல் படுகின்றது. அதுதான் "சந்திர கிரகணம்". அதுவும் ராகு-கேது என்ற Black-hole-க்கு நேரில் வந்தால்தான் அந்த மறைவு தெரியுமே தவிர மற்றபடி மறைப்பது இல்லை. ஆகையினால் ஒவ்வொரு மாதமும் ராகு பிடித்து விட்டது, இது ஒரு பாம்பு என்று சொல்வார்கள். நீளமாக வருவது எல்லாம் பாம்பு என்று சொல்லிக்கொள்வது நமது வழக்கம். 

இதனால் சூரிய ஒளி, சந்திர ஒளி பாதிக்கப்படும்போது நம் உடலில் உள்ள ரசாயனம் magnetic force வித்தியாசப்படும். அந்த மாறுதல் ஏற்படும்போது நமது உணவு செரிமானமாகின்ற முறை குறைவாக இருக்கிறது. அந்த நேரத்தில் தெய்வீக நினைவு அல்லது வேறு எதாவது சங்கற்பம் செய்வது நல்லதே. அப்படி இல்லாமல் இஷ்டம்போல் சுற்றும்போது உடல் உறவு கொள்ள நேரிடும். அந்த நேரத்தில் விளையக் கூடிய குழந்தை கேடுற்ற உடலும் மனமும் உடையதாக இருக்க கூடும் என்பதை நாமே யூகித்துக் கொள்ளலாம். ஆகவே, இத்தகு விபத்துக்களை தடுப்பதற்காகவே அந்த நாட்களை விரத நாட்களாக ஆக்கி வைத்திருக்கின்றனர்.

கிரகண நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இதனால் உடலினுடைய சக்தி அழிவு இல்லாமல் immunity அப்படியே காப்பாற்றப்படும்.

கிரகணம் முடிந்து குளிப்பது என்பது எப்பொழுதும் குளிப்பது போல்தான். அப்பொழுது குளிக்காமல் போனால் ஒன்றும் இல்லை. தூய்மை வேண்டும் என்று எடுக்கும்போது எதற்குமே குளித்துவிட்டு செய்வது ஒரு சடங்குதான்.

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் 
வெறும் எண்ணம் மட்டும்தானே, நான் என்ன செயலிலா இறங்குகிறேன்? என்று ஒரு தீய எண்ணத்திற்கு இடங்கொடுத்து விடக் கூடாது. விளைவுக்கு அஞ்சி, அந்த எண்ணத்தின் வழி நீங்கள் செயலில் இறங்காமல் இருந்து விடலாம். ஆனால் அந்த தீய எண்ணம் திரும்பத் திரும்ப உங்கள் மனதில் தோன்றிச் செயலாக உருப்பெற உங்களிடத்திலேயே வேட்கையையும், உந்துதலையும் தோன்றச் செய்து, செயலாக மாற்றம் பெற முனையும். எனவே எப்போதும் நல்லவற்றையே எண்ணிக் கொண்டிருக்க வேண்டும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

குரு என்பவர் யார்? எளிய விளக்கம்

பண்டைய காலந்தொட்டே குருவிற்கென்று பக்தி கலந்த மற்றும் தீவிரமான நன்றி உணர்வுடன் கூடிய மரியாதை, பணிவு வழங்கப்படுவது ஏன் ?

வேதம் சொல்கிறது,

குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு
குரு தேவோ மஹேஸ்வரஹ
குரு சாட்சாத் பரப்ரம்மா
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹா. என்று 

ஏன் நம்மை போன்ற ஒரு சாதாரண மனிதருக்கு அவ்வளவு மதிப்பளிக்கப் பட்டுவருகிறது?

அந்த குரு என்பவர் யார்?

  • ஒரு சினிமா நடிகனை எடுத்துக்கொள்வோம். நடிகனுக்கே தனக்குள் இருக்கும் திறமை தெரியாத மயக்க நிலையில், அத்திறமையை சுட்டிக்காடியதோடல்லாமல் அவனை உலகப் புகழ் பெரும் அளவிற்கு உயர்த்திய இயக்குனர் தான் குருவா?(ரஜினி, பாலச்சந்தர்)
  • சாதாரண குடும்பத்தில் பிறந்த Indian film actress Shriya Saran ஐ எடுத்துக்கொள்வோம். தனது நடன ஆசிரியரின் அழைப்பின் பேரில் ஒரு நடன நிகழ்ச்சியில் பங்கேற்றதால் திரை உலகிற்கு எடுத்துக்காட்டப்பட்டு திரையுலகில் மிகப் பிரபலமான  ஷ்ரியாவிற்கு அவரது நடன ஆசிரியரும், இயக்குனரும் குருவோ ?
  • Airtel Junior Super Singer ஐ எடுத்துக்கொள்வோம். முதல் நாள் மிகவும் கஷ்டப்பட்டுப்  பாடும் ஒரு குழந்தை ஒரு Magic போன்று மூன்றே நாட்களில் அனந்த் அவர்களின் Voice training ற்கு பிறகு பிரமிக்க வைக்கும் அளவிற்கு பாடுகிறதே! அவர் தான் குருவா?

நம் நிலையை நாம் உணராத இந்நிலையைதான் ரிஷிகள் மயக்க நிலை என்கிறார்களோ? அதை தெளியவைக்கும் மேதைகளே குரு ஆகிறார்களோ ?

அப்படியானால் நாமும் தூய உள்ளத்துடன் உடன் உறைபவர்களின், உடன் படிப்பவர்களின், உடன் பணிபுரிபவர்களின் திறமையை ஊக்குவித்து அவர்களின் ஆற்றலை அவர்களுக்கும் உலகிற்கும் காண்பித்தால் நாமும் குரு தானோ?

குரு என்பது ஒரு நபரல்ல போலும், ஒருவரின் consciousness ஐ மேல் நோக்கி இழுக்கும் தன்மை போலும். அது சினமா துறையாக இருக்கலாம் இல்லை பக்தி மார்கமாக இருக்கலாம்.

குரு' என்ற சம்ஸ்கிருத வார்த்தைக்கு 'இருளை விலக்குபவர்' என்று பொருள். குரு நம்மிடமுள்ள அறியாமையாகிய இருளை அகற்றி, ஞானோதய மார்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறார்.

குரு என்பவர் சாலை வரைபடம் போல. குருவின் வழிகாட்டல் இல்லாமலும் ஒருவர் தான் போய் சேர வேண்டிய இலக்கை அடையலாம். ஆனால் நீண்ட காலங்கள் அதற்காக செலவிட நேரும். குரு பூர்ணிமா அன்று ஆன்மீக சாதகர்கள் தத்தம் குருமார்களுக்கு நன்றி செலுத்தி அவர்கள் அருளைப் பெறுகிறார்கள். குரு பூர்ணிமா அன்று யோக சாதனை அல்லது தியானத்தில் ஈடுபடுபவர்கள் மிகவும் பயன் பெறுகின்றனர் என்று வேதம் கூறுகிறது.

மனிதனிடம் இறை அருள் எப்படி வெளிப்படுகின்றது

நாம் இறை அருள் வெளிப்பாட்டை பல வகையில் கேள்விப்பட்டிருப்போம்.  விஸ்வரூப தரிசனம், ஒளிவட்டம் etc.  வேறு ஒரு கோணத்தில் இறை அருளை சிந்திப்போம்.  எந்த அடிப்படையில்?

இறை அருளைப்பெற்றவன், கண்டிப்பாக எவ்வழியிலும் கஷ்டப்பட மாட்டான்.  ஆனால் இறை அருளைப் பெறாதவனோ துன்பப்படுவான்.  இதன் அடிப்படையில் தான் உலக சுகங்களை அடைய நாம் இறைவனை நாடுகிறோம் அல்லவா? நம் வேண்டுதல்களை  உற்று நோக்குங்கள்.

சிறுவயதில் - நான் தேர்ச்சி பெற வேண்டும். பின் வேலை கிடைக்க வேண்டும்.

திருமணம் ஆக வேண்டுதல்கள் பல.   பின் சுமுகமான திருமண வாழ்வின் தடைகள் அகல பரிகாரம்.  குழந்தை ...., உடல்நலம் ,....குழந்தையின் கல்வி .....Etc.  இத்தனை வேண்டுதல்களும்  நிறைவேற நாம் இடும் தக்ஷனை ரூபாய் 10 அல்லது 20 .

துன்புருபவன் இறையருள் பெறாதவன், இன்புருபவன் இறையருள் பெற்றவன் அல்லது புண்ணியசாலி என்ற அடிப்படை கருத்தை சிந்தித்தபடி கீழ் வருவனவற்றை ஆராய்வோம். 

இன்புருபவன் இறையருள் பெற்றவன் 

Financial Intelligence உள்ளவர்கள், நிதி சூழ்நிலைகளை திறம்பட கையாண்டு பணம் அவர்களின் திறமையால் பணம் படைத்தவர்களாக உள்ளனர்.

Music Skills உள்ளவர்கள் அவர்களின் திறமையால்   கச்சேரி, தொலைக்காட்சி நிகழ்ச்சி என புகழுடன் உள்ளனர்.

நடிக்கும் திறமை படைத்தவர்கள், அத்திறமையால் உலகப் பிரபலமாகி, புகழுடனும், பணத்துடனும் வாழ்கிறார்கள்.

துன்புருபவன் இறையருள் பெறாதவன்.

திறமை அல்லது பரிட்சயம் இல்லாத ஒரு வாகன ஓட்டியின் அறியாமையால்  தனக்கும் பிறருக்கும் விபத்து நேர்கிறது.

அறிவியல் வளர்ச்சியை அறியாத ஒரு பாமர மனிதனின் அறியாமையால் இன்றும்  இயந்திரங்களின் உதவி கொண்டு எளிமையாக செய்யக்கூடிய வேலையை பழைய முறைகளை பாரம்பரியம் என்ற பெயரில் அறியாமையால் பின்பற்றி காலத்தையும் உடல் உழைப்பையும் வீணாக்கி துன்புறுகிறான்.   பாரம்பரியம் கடைபிடிக்க வேண்டிய  செயல்களை Modern என்ற பெயரில் பின்பற்றாமலும் துன்புறுகிறான்.

உதாரணம்.  Mixie, Grinder பயன்பாடு   மற்றும்  தமிழை தமிழ் நாட்டிற்குள் பேசுவதற்கு தயக்கம். மொழிழ்ப் பயன்பட்டிற்குள் ஒருவனின் வாழ்க்கைத் தரம் Status தாக்கம் குறுக்கிடுவதே அறியாமைதான்.

மருத்துவ வளர்ச்சியை அறியாதவர்கள் நோயினால் துன்பப்படுவது. விதி என்று அறியாமையால் முடங்கி இருப்பது.

ஒருவேலை இறையருள் திறமை சாலிகளுக்கு மட்டும் தானோ?  அல்லது கடினமாக உழைப்பவர்களுக்கு மட்டும் தானோ?

அறிவில்தான் மனிதன் வேறுபடுகிறான் என்பதை ஒப்புக்கொள்ள முடிந்தால், அறிவேதான் இறையருள் என்பது புரியும்.

ஆழமாக சிந்தித்தால் நாம் இறைவனின் அத்தனை பெருமைகளையும் உணர்வதே அறிவால் தான்.

இன்னும் ஆழமாக சிந்தித்தால் அறிவைத் தருவதே இறைவன்   தான்.

 ஒருவேளை நாம் மனநிலை பாதிக்கப்பட்டு பிறந்திருந்தால், இறைவனைக் கூட அறியமுடியாது, எங்கே திறமை அடைவது.

நம்மிடம் உள்ள இறைஅருளை வெளிக்கொணர,  கடினமாக உழைக்கவேண்டும். உழைத்தால் திறமை வரும், வந்தால் இறைவன் அருள் வரும் ...

என்ன Sir இது உழைப்பின்றி இறைவன் அருள் கூட கிடைக்காதா......!

நன்றியுடன் 
பாலாஜி 



அடிப்படை இல்லாத பக்தி அறியாமை

படிக்காமல் தேர்ச்சி பெற வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவது.
முயச்சி செய்யாமல் வேலை கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதல்.

இறைவனின் உருவம் மட்டுமே இறைவன் என்றும் கோயிலில் மட்டுமே அவன் உறைகிறான் என்றும் எண்ணுவது.

உதாரணம் :அன்று சிவன் பாதுகாப்பிற்காக ஈட்டி வைத்திருந்தார் என்றால், இன்று அதைவிட மேலான நவீன ஆயுதம் வேண்டும்.  உருவம் மட்டும் இறைவன் இல்லை..


நான் இறைவனை உண்டாக்கின பெரியோர்களை வணங்குபவன். ஏனென்றால் அடிப்படை சாமான்ய மக்களுக்கு தத்வார்த்தமான விஷயங்களை புரியவைப்பதின் கடினத்தன்மையை நன் உணர்கிறேன்.

அவர்களுக்கு உழைப்பதற்கும், உழைத்தக்  களைப்பில் உறங்குவதற்கும் நடைமுறையில் நேரம் சரியாக இருக்கிறது.

அவர்களும் படைப்பின் மூலத்தை உணர்ந்து அமைதியாகவும் மெய்யறிவுடனும் வாழ  வேண்டும் என்பதே இறைவன்  படைக்கப்பட்டதன் நோக்கம்.  அறியாமையே அனைத்து துன்பத்தின் பிறப்பிடம்.

எல்லாம் நம் முயற்சியால் மட்டும் நடைபெறுகிறது என்பதும் அறியாமை தான்.

விதை விதைத்தால் தான் அறுவடை செய்யலாம் அனால் உலகின் முதல் விதையை விதைத்தவன் யார்?

சமைக்க தெரியாதவனுக்கும் சாம்பார் ஒருநாள் நன்றாக சுவையுடன் அமையலாம்.  அனால் சாம்பார் தினமும் அதே சுவையுடன் அமைய வேண்டும் என்றால் சமையல் அறிவு வேண்டும்.   Ingredients மற்றும் consistency  துல்லியமாக அறிந்திருக்க வேண்டும்.  கண்களை மூடி மந்திரம் ஜெபித்தால் இந்த யுகத்தில் சாம்பார் வராது.  சாம்பார் மட்டும் அல்ல எதுவுமே சாத்தியம் இல்லை.

இந்த படைப்பினை உற்று நோக்கினால் அனைத்தும் Pattern, Precision and regularity அதாவது அமைப்பு, துள்ளியம் மற்றும் இயக்க ஒழுங்கு இன்ற அடிப்படையில் ஒரு நீதியோடு இயங்கி வருகிறது.

நெருப்பு என்றால்எரிதல் , எரித்தல், சுடுதல் சுற்றி பரவுதல் என்பது அதன் இயல்பு மற்றும் இயக்க ஒழுங்கு .  குழந்தை தெரியாமல் தொட்டாலும் சுடும், ஒரு ஞானி தெரிந்து தொட்டாலும் சுடும்.  சுடும் என்ற அறிவே, சுடுதல் என்றபாதிப்பிலிருந்து நம்மை காக்கும்.  

அறியாமை நம்மை எரித்துவிடும்.

இறைவன் செய்யும் செயலின் விளைவாகவே வெளிப்படுகிறான்.  இறைவனின் எல்லையற்ற இயல்பை உணர்ந்தால் வேண்டுதல் என்பதே எழாது.  நாம் வேண்டியதாலா  கடல் உண்டானது,  மலை உண்டானது ?  காலத்தால் மாற்றம் அடைவதே நன்மையையும் தீமையும்.

துன்பம் இன்பம் என்பது தனிமனித அனுபவமே.  பேருந்தின் கடைசி இருக்கை நமக்கு நரகம் அனால் கல்யாணம் ஆன புது தம்பதியர் சொர்க்கம் என்று கருதலாம். பேருந்தின்  ஒவ்வொரு வளைவிலும் இன்பமான அனுபவன்கள்.

அடிப்படையை உணர அமைதி வேண்டும். அமைதிக்கு ஒழுக்கம் வேண்டும். 

அறிவே இறைவன்.

By,
Balaji











அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கப்பாலாய்…-- இறைவன்

எந்த ஒரு பொருளினுள்ளும் புரோட்டன், நியூட்ரான் மற்றும் எலக்ட்ரான்களே இயக்க நிலையிலோ அமைதி நிலையிலோ உள்ளன.

நம் உடலினுள்ளும் அதே அணுககூட்டமைப்பே உள்ளன.

அப்படியானால் நாமும் எல்லா பொருள்களும் ஒன்றா?

அணுக்களின் மாறுபட்ட இயக்கம் மற்றும் மோதுதலால் ஒலி மற்றும் ஒளி  உண்டாகிறது.  உதாரணம் Microwave Oven.

எலக்ட்ரானின் ஓட்டமே மின்சாரம்.

பெரும்பாலான எல்லாவற்றையும் மின்சாரம் தான் இயக்குகிறது என்றால் இறைவன் தான் அந்த மறைந்துள்ள மறை பொருளா?

அணுக்களின் சுழற்சி விசையால் உருவாகும் ஈர்ப்புவிசையே காந்தம்.

மின்காந்த விசை அணுக்களால் விளைகிறது. மனித ஆவிகளை (Gost) அல்லது உயிரை Electro Magnetic Rays Detector மூலம் கண்டறிகிறார்களே ! உடலில்லா உயிரும் அணுக்களின் தொகுப்பா?

மனித உயிரும் இறைவனும் ஒன்றா ? அப்படியானால் செய்யும் செயலின் விளைவால் உண்டான பதிவினால் மட்டும் தான் மனிதன் வேறுபடுகிறானா?

உண்ணும் உணவும், அதை உருவாக்கின மரம், செடி, கொடிகளும் அணுக்களே 

அதை உண்டு வளரும் உடலும், அதனுள் உறையும் உயிரும் அணுக்களே

காற்றில்லா  இடத்திலும் நுழைந்த, ப்ரம்மாண்டம் முழுவதும் நிறைந்த ஈதறிக் பார்டிக்கள் முழுவதும் அணு.

நீரும் அணுகூட்டமைப்பே , அணுவின் இடைவெளியுடன் கூடிய இயக்கமே காற்று.   மோதுதலால் வெப்பம் மேலும் அதிர்வதால் ஒலி.

இதனால் தான் அபிராமி அந்தாதியில் அணுவிற்கும் அணுவாய் என்று குறிப்பிட்டனரோ ?

அதனால் தான் விஷ்ணுவின் பெயர் விஷ்ணும் (எல்லாம் ) என்று ஆனதோ ?

செய்யப்படும் யக்ஞம் நான் தான்.  எதனால் செய்யப்படுகிறதோ அந்த பொருள்களும் நான் தான்.அதை அனுபவிப்பவனும் நானே, செய்பவனும் நானே. அதனால் விளையும் பயனும் நானே.

உலகில் வெற்றி தோல்வி என்பதே கிடையாது. விளைவு (Result and Consequence) மட்டும் தான் உண்டு.

இந்த விளைவுதான்  இறைவனா?

Witten By 
Balaji. 




 

கையில் காப்புக்கயிறு கட்டுவது ஏன்?


நம் உடலில் பல்வேறு முடிச்சுகள் இருக்கின்றன.ஒவ்வொரு முடிச்சுகளும் உடம்பின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துகின்றன அந்த வகையில் கையில் இருக்கும் முக்கிய முடிச்சு பகுதி நம்முடைய மணிக்கட்டு ஆகும்.

இந்த இடத்தில்தான் இதயத்தின் இயக்க தன்மையை அறிந்துகொள்வதற்க்காக நாடி பிடித்து பார்ப்பார்கள்.நம்முடைய எண்ணங்கள் மற்று மனநிலையின் அடிப்படையிலேயே நாடியின் செயல் பாடும் அமைகிற்அது.

நம்முடைய மணிக்கட்டு இடத்தில் கயிறு கட்டினாலும் அல்லது காப்பு போடுவதாலும் நாடியின் இயக்கம் சீராகிறது.எண்ணங்களும்,மனநிலையும் அலைபாயாமல் இருக்கும்.

பெரும்பாலனவர்கள் மஞ்சள்,கறுப்பு,சிவப்பு நிறங்களில் கயிறுகட்டுவார்கள் மேலும் செம்பு,வெள்ளி,தங்கம்,ஐம்பொன்னில் காப்பு செய்து போட்டுகொள்வார்கள் இது சிறப்பானதாக இருந்தாலும் பட்டு, தர்ப்பை, அருகம்புல் போன்றவை பிரஞ்ச சக்திகளையும்,நவக்கிரக கதிர் வீச்சுகளையும் ஈர்க்கும் தன்மை கொண்டவை அதானால் இவைகளை நூல்களாக தரித்து கைகளில் அணியலாம்.

ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் அணிய வேண்டும். 

சிவ லிங்கம் பற்றி ரஷ்ய விஞ்ஞானியின் ஆராய்ச்சியில் கிடைத்த முடிவு.

சிவலிங்கங்கள்ப் பற்றிய டாக்டர் “விளாதி மீரின்” என்பவரின் ஆராய்ச்சி மிக வித்தியாசமானது. அது இந்த பூமியில் மொத்தம் எத்தனை லிங்கங்கள் உள்ளன என்று எண்ணிப் பார்க்கவோ, இல்லை அவற்றின் பூர்வ புராணக் கதைகளை அறியவோ முயலவில்லை. இவற்றுக்கப்பால் சிவலிங்கங்கள் பற்றி நாம் யோசிக்கவும் அதை நாம் நேசிக்கவும் நிறைய அடிப்படைகள் இருப்பதாக டாக்டர் விளாதிமீர் கருதினார். 

அதில் முதலாவது, ஸ்தூல வடிவங்களில் இறை உருவங்களை உருவாக்கி வழிபாடு செய்யும் இந்து மதத்தில் ஒரு குழவிக் கல்லைப் போன்ற, லிங்கம் என்னும் உருவமற்ற ஒரு உருவம் எப்படி உட்புகுந்தது என்பதுதான். உண்மையில் லிங்க சொரூபமானது மூன்று மதத்திற்கும், புத்த ஜைனர்களுக்கும் கூட பொதுவானது என்பதையும் அவர் கண்டுபிடித்தார். 
ஒரு மலை உச்சி! அதில் பௌர்ணமி இரவில் கரிய நிழல் உருவாய் கண்ணுக்குத் தெரிந்த லிங்க உருவத்தை ஒரு கிருத்தவன் சிலுவைச் சின்னமாகப் பார்த்தான். ஒரு இஸ்லாமியன் தங்களின் மசூதிக் கூரை தெரிவதாக கருதினார். புத்த ஜைன சன்யாசிகள் தங்கள் குருமகாங்கள் அமர்ந்து தவம் செய்து கொண்டிருப்பதாகக் கருதினார்கள். ஒரு இந்துவோ அது சிவலிங்கம் என்று திடமாக கருதி இருந்த இட்த்தில் இருந்தே வில்வ இலைகளை வாரி வாரி அர்ச்சித்தான். உருவம் ஒன்று. ஆனால் அனைத்து மார்க்க தரிசிகளையும் அது திருப்திப்படுத்தியது என்றால் சிவம்தான் முதலும் முடிவுமான அனைவருக்கும் பொதுவான இறை ஸ்வரூபமா? டாக்டர் விளாதிமீர் இப்படிதான் கேட்கிறார். மேலும் அவர் புராணங்களிலும், இதிகாசங்களிலும் சிவம் பற்றி சொன்னதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. லிங்க உருவம் பற்றி யாரும் சரியாக உணரவில்லை என்பதுதான் அவரது கருத்து. 

ஒரு ரஷ்ய நாட்டுப் பிரஜையாக இருந்தாலும் சிவலிங்க சொரூபம் அவருக்குள் ஆழமான பாதிப்புகளை உருவாக்கியதாக அவர் கூறுகிறார். லிங்கம், சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம் என்று கணித வடிவங்கள் அவ்வளவையும் தனக்குள் கொண்டிருப்பதாகவும், ஒவ்வொரு கோணத்தில் இருந்து பார்க்கும்போதும் ஒருள் பொருள் தருவதாகவும் இருக்கிறது என்பது அவர் கருத்து. குறிப்பாக அணு தத்துவம் சிவலிங்க சொரூபத்துக்குள் விலாவரியாக இருக்கிறது. லிங்கத்தைப் பயன்படுத்தத் தெரிந்தால், அது மழை தரும், நெருப்புத் தரும், காற்று தரும் கேட்ட எல்லாம் தரும், என்றும் நம்புகிறார். அப்படி என்றால் சிவமாகிய லிங்க ஸ்வரூபம் என்பது மானுடர்கள் பயன்படுத்தத் தெரியாமல் வைத்திருக்கும் மகத்தான ஒரு எந்திரமா? டாக்டர் விளாதிமீரின் சிவஸ்வரூப ஆராய்ச்சியில் ஒரு ஆச்சரியமூட்டும் தகவல் ஒன்றும் அவருக்குக் கிட்டியதாம். 

இந்த மண்ணில் பூமிக்கு மேலாக கண்ணுக்குத் தெரியும் விதத்தில் உள்ள லிங்க ஸ்வரூபங்கள் இல்லாமல் பூமிக்குள் புதைந்து கிடக்கும் ஸ்வரூபங்களும் ஏராளமாம்! அதுவே அவ்வப்போது ஸ்வயம்பு மூர்த்தியாய் வெளிப்படுகிறதாம். ஸ்வயம்பு மூர்த்தங்களின் பின்புலத்தில் பஞ்சபூத சக்திகளின் இயக்கம் ஒரு சீராகவும், ஆச்சரியம் ஊட்டும் விதத்தில் ஒன்றோடொன்று பின்னிப்பினைந்த கூட்டுறவோடும் செயல்படுகிறதாம். சுருக்கமாகச் சொன்னால், அந்த மூர்த்தங்களைப் பஞ்ச பூதங்கள் ஆராதிக்கின்றன என்பதே உண்மை என்கிறார். இப்படிப்பட்ட ஆராதனைக்குறிய இடங்களில் கூர்ந்து கவனித்தபோது பஞ்ச பூதங்களும் சம அளவிலும் அத்துடன் சீரான இயக்கத்துடனும் அவை இருக்கின்றன. மனித சரீரத்திலும் பஞ்ச பூதங்கள் உள்ளன. இவை சுயம்புலிங்க ஸ்தலங்களில் இயற்கையோடு கூடிச் செயல்படுகின்றன என்கிறார். அதாவது சுயம்பு மூர்த்தி உள்ள ஸ்தலங்களில் வாழும் மனிதர்களே அந்த மண்ணுக்கான மழை. காற்று, அக்கினி மண்வளம் ஆகியவைகளைத் தீர்மானிக்கிறார்கள் என்று கூறும் விளாதிமீர், மதுரை போன்ற சுயம்புலிங்க ஸ்தலங்களில் கூடுதலான மழை அல்லது குறைவான மழைக்கு அங்கு வாழும் மக்களின் மனநிலையே காரணமாகிறது என்கிறார். சுயம்பு லிங்கங்கள் உள்ள மண்ணில் வாழும் மக்கள் மனது வைத்தால் அங்கே எதை வேண்டுமானாலும் உருவாக்கிட இயலும் என்றும் கூறுகிறார்!. 

இந்த பூமியானது சூரியன் உதிர்ந்த ஒரு சிறிய அக்னித் துளி என்கிறது விஞ்ஞானம். மெல்லக் குளிர்ந்த இதில் அடுக்கடுக்காய் உயிரினங்கள் தோன்ற ஆரம்பித்தன. அந்த உயிரினங்கள் உயிர் வாழத் தேவையான அனைத்தும் கூட அப்போது தோன்றின. இதுதான் பல கோடி ஆண்டுகளைக் கண்டு விட்ட இந்த பூமியின் சுருக்கமான வரலாறு. மாற்றம் என்பதே இந்தப் பூமியில் மாறாத ஒன்றாக என்றும் இருப்பது. அந்த மாற்றங்களால் வந்ததே இந்த மனித சமூகம். இதன் நடுவே மிக மாறுபட்ட கருத்துகளுடன், நமக்கிருக்கும் அறிவாற்றலால் நம்பமுடியவில்லை என்று ஒரு வார்த்தையில் கூறும் விதமாய் இருப்பதே மதப் புராணங்கள்.

இதில் புராணவழி அறியப்பட்ட சிவமானது தனித்து நிற்கிறது. “புராணம், விஞ்ஞானம் இரண்டையும் கடந்து மூன்றாவதாய் ஒன்றும் உள்ளது. அதுதான் நான்! மானுடமே முடிந்தால் என்னைப் புரிந்துகொள் என்பதுபோல் இருக்கிறது அது” என்கிறார் டாக்டர் விளாதிமீர்! இ ந்த பூவுலகில் சிவம் தொடர்பான அடையாளக் குறியீடுகள் பாரத மண்ணில் மட்டுமன்றி ஆப்பிரிக்கா, ஐரோப்பா முதலிய கண்டங்களில் கூட இருக்கிறது என்பது டாக்டர் விளாதிமீரின் கருத்து. அமெரிக்காவில் “ கிராண்ட் கன்யான் “ என்னும் வித்தியாசமான மலைப் பகுதியில் பராசக்தியின் அம்சங்கள் என்று வர்ணிக்கப்படும் “ சிவம், விஷ்ணு, பிரம்மன் “ மூன்றின் அடையாள உருவங்கள் காணப்படுகின்றனவாம். ஆயினும் இந்திய மண்ணில் மட்டும் சிவம் தொடர்பான சிந்தனைகளும் சைவம் என்கிற ஒரு பிரிவும் உருவாக ஆழமான ஒரு காரணம் இருப்பதாக விளாதிமீர் கருதுகிறார்.

உலகின் உயர்ந்த சிகரமான இமயம் பூகோள ரீதியில் பூமியின் மையத்தில் {கிட்டதட்ட} காணப்படுகிறது. அதன்படி பார்த்தால் இந்த உலகே கூட சிவலிங்க சொரூபம் எனலாம். ஒரு வட்டத்தில் இருந்து கூம்பு முளைத்தது போல் உலகமே ஆவுடையராகத் திகழ இமயம் சிவஸ்தம்பமாக எழும்பி நிற்கிறது. அங்கே பஞ்ச பூத ஆராதனையாக குளிர்ந்த காற்றும் உறைந்த பனியே நீராகவும், அதன் முற்றிய குணமே நெருப்பாகவும் இருக்கிறது. ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட வெளி வேறு எங்கும் காணப்படாத விதத்தில் தூயதாக எல்லாவித கதிர் வீச்சுக்களையும் காணப்படாததாகக் திகழ்கிறது. இங்கே உயிராகிய ஜீவன் மிகச் சுலபமாக சிவத்தை அடைந்து விட {அ} உணர்ந்து விட ஏதுவாகிறது. அதனாலேயே இங்கே ஞானியர் கூட்டம் அதிகம் இருக்கிறது என்பதும் அவரது கருத்து! 

இந்த ரஷ்ய விஞ்ஞானி சொன்ன விஷயங்கள் எதுவும் எந்த விஞ்ஞானியும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. {இது எத்தனை பேருக்கு தெரியும்? அவசியம் பகிரவும்...}

தானங்களால் ஏற்படும் பலன்கள்

தானம் என்பது வேறு தர்மம் என்பது வேறு.அதாவது தர்மம் என்பது தனக்கு தெரிந்த விசயங்களை அடுத்தவருக்கு கூறி நல்வழிக்காட்டி அவரை வாழ்வில் உயர்த்துவது தர்மம் ஆகும்.தானம் என்பது தனக்கு தேவைக்கு மீறிய செல்வங்களை இலவசமாக கொடுப்பது.

1.ஆடைகள் தானம்: 
ஆயுள் விருத்தியாகும்.புத்திர தோசம் விலகும்.அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று.வியாழக்கிழமையன்று ஆடைதானம் செய்வதால் பெண்களிடம் நல்லுறவும், சுக போக பாக்யவிருத்தியும்,உடல் வலிமையும் உண்டாகும்.

2.தேன் தானம்:
புத்திர பாக்யம் இல்லாதவர்கள், கர்ப்பப்பை வலிமை இல்லாதவர்கள், வெண்கலப்பாத்திரத்தில் தாரா பலன் உள்ள நட்சத்திரத்தன்று( இதை அறிய உங்கள் ஆஸ்தான ஜோதிடரை அணுகவும்) சுத்தமான தேனை தானம் செய்ய வேண்டும்.

3.நெய்தானம்:
பாவக்கிரக திசை நடப்பவர்கள்(6,8,12 ஆம் அதிபதியின் திசை).நோய் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வெண்கலக் கிண்ணத்தில் சுத்தமான நெய் தானம் செய்ய வேண்டும்.சகலவிதமான நோய்களும் தீரும்.

4.தீப தானம்:
இஷ்ட தெய்வ சன்னதியில் மாதம் ஒருமுறை 10 தீபம் ஏற்றினால் கண் கோளாறுகள் தீரும்.அல்லது ஏழை,எளியவர்களுக்கு மின்விளக்கு வசதி செய்து கொடுத்தால் பார்வைத்திறன் எப்போதும் பாதுகாக்கப்படும்.

5.அரிசிதானம்:
பூர்வ ஜென்ம தோஷங்கள், தெரிந்தும் தெரியாமலும் செய்தவை விலக ஏழை அல்லது வாழ்வில் நலிந்தவர்களுக்குஅரிசி தானம் செய்யவேண்டும்.யாருக்கு வீடு வாசல் இல்லையோ அவர்களுக்கு தானம் செய்தால் தான் நாம் தானம் செய்த பலன் நமக்கு உணடாகும்.

6.கம்பளி-பருத்தி தானம்:
வாயு சார்ந்த நோய் உள்ளவர்கள் வயது முதிர்ந்தவர்களுக்கு கம்பளிதானம் செய்தால் நோய் தீரும்.வெண்குஷ்டம் அறிகுறி தென்பட்டால் பருத்திதானம் (பருத்திஉடைகள்) செய்து அதிலிருந்து மீண்டுவிடலாம்.

THREE-BITE PRACTICE

THREE-BITE PRACTICE

"You can do this anytime you eat a meal. Before taking the first bite, just pause and think of those men and women of wisdom and mentally offer them your food. In this way, you connect with the virtue of devotion.

Before taking the second bite, pause and offer your food to all those who’ve been kind to you. This nurtures the virtues of gratitude and appreciation. The third bite is offered to those who are suffering: all the people and animals who are starving, or being tortured or neglected, without comfort or friends. Think, too, of all of us who suffer from aggression, craving, and indifference. This simple gesture awakens the virtue of compassion.

In this way—by relying on our teachers, our benefactors, and those in need—we gather the virtues of devotion, gratitude, and kindness."
(From Pema's book No Time To Lose)

Compassion and the Nature of Mind

If someone were to hit us over the head with a stick, we wouldn’t get angry at the stick. We’d get angry at the person who hit us. And in the same way, if our partner expresses anger towards us, we shouldn’t get angry at our partner, because they are under the sway of disturbing emotions and the ignorance toward the true nature of things that is the root of that anger. 

So thinking in this way, we can gear our response in a fresh way, from a more positive angle and see these moments of anger as opportunities... to shift the trajectory of the relationship in a more positive way. 

If we can do that, if we can respond in new ways like that, then I think we can really stand a chance of transforming our relationship in a positive way.

"Compassion and the Nature of Mind" Teachings at Hunter College, NYC - June 29, 2011

தியானம்

தியானம் செய்வதால் உலகில் போர் எழாமல் காக்க முடியுமா!, அது எப்படி? ஆறு தீய குணங்கள் மனிதனிடம் இல்லாமல் இருந்திருந்தால், மகாபாரதம் என்ற மாபெரும் போர் நடந்தே இருக்காது. 1. பேராசை 2. சினம் 3. கடும்பற்று 4. முறையற்ற பால் கவர்ச்சி 5. உயர்வு தாழ்வு மனப்பான்மை 6. வஞ்சம் என்ற ஆறு தீய குணங்களை, மகாபாரத கதையில் இருந்து நீக்கிப்பாறுங்கள், போர் உருவாக வாய்ப்பே இருந்திருக்காது. ஒரு மனிதன் தவறு செய்கிறான் என்றால், அதற்க்கு தூண்டுதலாக இந்த ஆறு குணத்தில் ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட இந்த தீய குணம்தான் காரணமாக இருக்கும். இந்த ஆராய்ச்சியை சாதாரண அறிவு உடையவர்கள் கூட செய்யலாம். உங்களை சுற்றயுள்ள ஏதோ ஒரு சமுதாய சிக்கலையோ அல்லது குடும்ப சிக்கலையோ எடுத்துக்கொண்டு இந்த ஆராய்ச்சியை நீங்களே நடத்தி பார்க்கலாம். அல்லது மகாபாரத கதையிலயே இந்த ஆராய்ச்சியை செய்து பார்க்கலாம். இந்த ஆறு தீய குணங்களும் மனிதனுக்கு எந்த மன நிலையில் எழுகிறது என்று சிந்தித்தோமானால் அது உணர்ச்சிவயப்பட்ட மன நிலையில் (at high mind frequency) தான் உருவாகிறது என்பது தெளிவாகும். மனம் அமைதி நிலையில் இருக்கும் பொழுது இந்த தீய குணங்கள் எழ வாய்ப்பே இல்லை. ஒரு மனிதன் ஏன் உணர்ச்சிவயப்பட்ட நிலைக்கு தள்ளப்படுகிறான்? பெரும்பாலும் பழக்கத்தின் காரணமாகவும், ஒரு சில நேரங்களில் தேவை மற்றும் சூழ்நிலையின் காரணமாகவும் அவன் உணர்ச்சிவயப்பட்ட நிலைக்கு தள்ளபடுகிறான். ஏற்கனவே பலமுறை உணர்ச்சிவயப்பட்டு, நாம் அந்த நேரத்தில் என்னென்ன நினைத்தோமோ, எந்த எந்த செயல் செய்தோமோ, அந்த செயலினால் என்ன என்ன விளைந்ததோ, அனைத்தும் நம்மில் பதிவாகி விடுகிறது, மீண்டும் அதே மன அலைச்சுழல் (Mind frequency) வரும் பொழுது, முன்பு என்ன என்ன அந்த அலைசுழலில் பதிந்ததோ, அனைத்து எண்ணங்களும், செயல்களும் அவன் மூலம் வெளியாகும். இதற்கு உதாரணம், நாம் பல நேரங்களில் தவறு என்று தெரிந்தும் கூட, சில காரியங்களை செய்து துன்பப்படுவோம். இதுதான் பழக்கம். மனிதன் எப்பொழுதும் பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் நடுவில் போராடிக்கொண்டே இருக்கிறான். பெரும்பாலும் பழக்கமே வெற்றி அடைகிறது. ஏனென்றால் பழக்கபதிவு விளக்கபதிவை விட வலிமையாக இருப்பதே இதற்க்கு காரணம். இது போன்று பழக்கத்தின் வழியே மீண்டும் மீண்டும் தவறு செய்யாமல் இருக்க மனதிற்கு ஒரு விழுப்பு நிலை வேண்டும். மனதின் அலைச்சுழலை குறைத்து மனதை அமைதி நிலைக்கு கொண்டு வர வேண்டும், அந்த அமைதி நிலையில் நிலைக்க வேண்டும். இந்த தகமை அனைத்தும் ஒருவர் தியானம் செய்துவர படிப்படியாக கிடைக்கும். மனதின் அலைச்சுழல் அதிகமானால் தானே, அந்த அலைச்சுழலில் பதிந்துள்ள தீய குணங்கள் வெளிவரும். ஒருவர் தியானம் பழக பழக, அவருக்கு மனதை எந்த சூழ்நிலையிலும் அமைதி நிலையில் வைத்திருக்கும் தகமை இயல்பாக வந்துவிடும். இது போன்ற மாற்றம் மனித மனங்களில் உருவாகுமானால், ஆறு தீய குணங்களுக்கு வாய்ப்பே இல்லை. இந்த ஆறு தீய குணங்கள் இல்லாமல் போனால், போர் மட்டும் அல்ல இந்த உலகத்தில் நாம் காணும் எந்த வித குற்றமும் நடக்க முடியாது. இதுவே மனித சமுதாயத்தில் நிலையான அமைதியை பெற்றுத்தரும். அவ்வளவு மதிப்புடையது தியானம். https://m.facebook.com/groups/194749033908852?view=permalink&id=688656667851417

உங்கள் மனமானது, மற்றவர்களின் குறைபாடுகளை பற்றி நினைத்து பாதிக்கப்படுகிறது.

உங்கள் மனமானது, மற்றவர்களின் குறைபாடுகளை பற்றி நினைத்து பாதிக்கப்படுகிறது. மற்றவர்களின் குறைபாடுகளை அவர்களிடமே விட்டுவிடுங்கள், அவர்களே அவற்றை கையாளட்டும். நீங்கள், உங்கள் மனதை கையாளுங்கள். நீங்கள் உங்களது சொந்த குறைபாடுகளை கையாளுங்கள் அதுவே போதுமானது.

ஞானம்

விதை, நிலம், எரு, தண்ணீர், காவல் இவைகள் அனைத்தும் சரியாக இருந்தால் தான் விளைவு நன்றாக இருக்கும். அதுபோலவே, ஒரு ஆசான் அத்துவிதத் தத்துவம் என்ற ஒருமைத் தத்துவ விதையை உன்அறிவு என்னும் நிலத்தில் ஊன்றினால் அது வளர்ச்சி பெற, நீ ஒழுக்கம் என்ற உரம் இடவேண்டும். அறிவை ஒன்றிப் பழகும் ஒருமைப் பழக்கமான தவமும் - ஆராய்ச்சியும் என்ற தண்ணீரும் பாய்ச்ச வேண்டும்.

அறிவை ஒன்றச் செய்து உறுதியான, அசைவற்ற நிலையடைவதே ஞானத்திற்குத் தேவையாக இருக்கிறது.

ஆகையால், அறிவு சலனப்பட்டுக் காமம், குரோதம், கோபம், மோகம், மதம், மாச்சரியம் என்னும் ஆறு குணங்களில் எதுவாயும் மாறாது பார்த்துக் கொள்ளும் விழிப்பு நிலையாகிய காவல் புரிய வேண்டும்.

இவைகள் எல்லாம் அமையும் வகைக்கும் அளவிற்கும் ஏற்றபடி "ஞானம்" என்ற விளைவும் உனக்கு உண்டாகும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

மங்கள ஆரத்தி

தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது, ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை.

சாதாரண நிகழ்வாக இதை புறக்கணிக்கிறோம். ஆனால் இதில் ஆழமான அர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது. இதில் முக்கியமான கருத்துகள் மறைந்துள்ளது.

தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள், மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண் ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு சுற்றும் 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூறுகின்றோம்.

ஒவ்வொரு மனிதனைச் சுற்றிலும் ஆரா (aura ) என்ற சூட்சுமப் பகுதி இருக்கிறது.

மனிதனுக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் அவனைச் சேரும் தீய கிருமிகள் ஆகியவை அந்த சூட்சும பகுதியில் முதலில் பதிந்து பின்னரே அவனுள் புகுகின்றன. திருமணம், குழந்தை பெறுதல், வெற்றியடைதல் ஆகியவற்றால் பலருடைய திருஷ்டி- மணமக்கள், தாய்-சேய், வெற்றியாளர் மீது அதிகம் விழவாய்ப்பு கூடுதலாக உள்ளது.

மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறனுண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம்.

அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம். ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ அணுக்களை அழித்து நம் நலன் பேனுவதோடு பிறருக்கும் அந்த விஷகிருமிகள் பரவாது தடுக்கிறது.வீட்டினுள் நுழையும் முன்பே 'ஆரா' சரீரத்தில் சேர்ந்துள்ள திருஷ்டி மற்றும் கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்திய பின்னரே சம்பந்தப்பட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போகும் வழக்கம் உள்ளது.

எனவே அது போல் ஆரத்தி எடுக்கும் போது பொருள் அறிந்து சரியான பாவனையுடன் செய்வது முக்கியம். அப்போது தான் அதன் பலனும் முழுமையாக இருக்கும்.

கணிதமும் கடவுளும்-Seven Reasons Why a Scientist Believes in God


கணிதத்தையும் கடவுளையும் இணைத்து சுமார் 941 புத்தகங்கள் சமீபத்தில் வெளி வந்துள்ளன.(அமேஸான் டாட் காமில் புத்தக விவரங்களைக் காணலாம்!) இவற்றில் விஞ்ஞானிகளின் பெரும்பாலான நூல்கள் அனைத்தும் இயற்கையில் காணும் கணித அமைப்பைப் பார்த்து வியக்கின்றன. பல விஞ்ஞானிகள் கடவுளைக் கணிதத்துடன் இணைத்துப் போற்றி மகிழ்கின்றனர்.


••• அமெரிக்க விஞ்ஞானியின் கணித நிரூபணம்



அமெரிக்க விஞ்ஞானக் கழகத் தலைவர் க்ரெஸி மாரிஸனை, "இறைவன் இருக்கிறானா? இருக்கிறான் என்றால் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் வேண்டும். ஆராய்ந்து கூறுங்கள்" என்று கேட்டபோது விஞ்ஞானிகளுடன் இதை ஆராய்ந்த அவர், "இறைவன் இருக்கிறான். இறைவனை அறிவியல் பூர்வமாக நம்புவதற்கான காரணங்கள் ஏழு" என்று பட்டியலிட்டுக் கூறி உலகையே வியப்பில் ஆழ்த்தினார். அவர் கூறிய ஏழு காரணங்களுள் முதல் காரணமே கணிதத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது சுவையான செய்தி!



அவர் கூறிய முதல் காரணம் இது தான்:-



கணித முறைப்படி பார்த்தால் இப்பிரபஞ்சம் அமைந்ததும் இயங்குவதும் ஒரு பேரறிவுடைய பரம்பொருளின் அறிவால் என்பதை நன்கு நிரூபிக்கலாம்.



ஒரு பையில் ஒன்று, இரண்டு என்று எண் குறிக்கப்பட்ட பத்துப் பொருட்களைப் போட்டுக் குலுக்குங்கள். ஒன்று என்ற எண் குறிக்கப்பட்ட பொருள் முதலாவதாக வருமாறு எடுக்க முயலுங்கள்! கணித நூல் வல்லுநர், இப்படிப் பொருளை வரிசையாக எடுக்கப் பத்தில் ஒரு வாய்ப்புத்தான் கிட்டும் என்று கூறுகின்றனர். ஒன்று, இரண்டு என்ற எண் குறிக்கப்பட்ட பொருள்களை அடுத்தடுத்து எடுக்கும் வாய்ப்பு நூற்றில் ஒன்றுதான். இது போலவே ஒன்று, இரண்டு, மூன்று என வரிசையாகத் தொடர்ந்து எடுக்கும் வாய்ப்பு ஆயிரத்தில் ஒன்று. இப்படியே வரிசையாக ஒன்றிலிருந்து பத்து வரை குறிக்கப்பட்ட பொருள்களை அவற்றின் எண் வரிசைப்படி அடுத்தடுத்து எடுக்கும் வாய்ப்பு ஆயிரம் கோடியில் ஒன்றுதான்!



இந்த தர்க்க முறையைப் பார்க்கும்போது, இவ்வுலக வாழ்விற்கு வேண்டிய பல்வேறு நிபந்தனைகள் சீராக அமைந்து, நிலைத்திருப்பது தற்செயலான நிகழ்ச்சி என்று கூற முடியுமா? பூமி தனது அச்சைச் சுற்றி மணிக்கு ஆயிரம் மைல் வேகத்தில் சுழல்கிறது. மணிக்கு நூறு மைல் வேகம் குறைவாகச் சுழன்றால் என்ன ஆகும்? நமது பகலும், இரவும் இப்போது இருப்பதைவிடப் பத்து மடங்கு அதிக நீளமுள்ளவையாகும்! நீண்ட பகலில் கதிரவனின் வெப்பத்தில் பயிர்கள் பொசுங்கும்; நீண்ட இரவில் மிஞ்சியிருக்கும் செடி கொடிகளும் விறைத்துப் போய் அழிந்து விடும்!



உயிர்களுக்கெல்லாம் ஆதாரமான கதிரவனின் மேல் பரப்பில் 12000 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை உள்ளது. நமது உடல் வெப்ப நிலை சுமார் 98.4 டிகிரி. நமது பூமி கதிரவனிடமிருந்து நம் உயிருக்குத் தேவையான அளவு வெப்பத்தைப் பெறுகின்ற தூரத்தில் உள்ளது. இந்தச் சூரியன் கொடுக்கும் வெப்பம் இன்னும் ஒரு மடங்கு அதிகரித்தால் நாம் வறுபடுவோம்! அரை மடங்கு குறைந்தால் நாம் குளிரில் விறைத்து உறைந்து போய் விடுவோம்! இப்படியே நிலவுக்கும் நமக்கும் இடையேயுள்ள தூரம், பூமியின் மேல் பரப்பு, கடலின் ஆழம், காற்று மண்டலத்தின் பருமன் ஆகியவை எதைக் காட்டுகின்றன? இவையெல்லாம் தற்செயலான நிகழ்ச்சிகளாக இருக்க முடியாது என்பதையே உறுதிப் படுத்துகின்றன.



க்ரெஸி மாரிஸனின் இதர ஆறு காரணங்கள் இறைவன் இருப்பதை விஞ்ஞான பூர்வமாக மேலும் உறுதிப்படுத்துகின்றன!



••• ••• விஞ்ஞானத்தின் தாய் ••• •••



கணிதத்தை விஞ்ஞானத்தின் தாய் என்று அறிஞர்கள் சொல்வர். அமெரிக்கன் மேதமேடிகல் சொஸைடி அதிகாரபூர்வமாக 97 கணித கிளைகளை அறிவித்துள்ளது; இந்தக் கிளைகளுக்கு கிளைகள் நூற்றுக்கணக்கில் உள்ளன! இவற்றில் ஆய்வுக் கட்டுரைகள் ஆயிரக்கணக்கில் வெளிவந்து விட்டன. இவற்றில் வெளிப்படும் சமன்பாடுகளோ எண்ணிலடங்கா. ஆனால் இத்தனை சமன்பாடுகளும் கடவுளை நோக்கி நம்மை அழைத்துச் செல்லாவிடில் அது வீண் என்று கூறிய அற்புதக் கணித மேதை ஒரு தமிழர் என்பதை நாம் மறந்து விட முடியாது!



••• ••• கடவுளை நினைவுபடுத்தும் சமன்பாடுகள் ••• •••



ஈரோட்டில் பிறந்து நாமகிரி அம்மனை நாளும் வழிபட்டு அம்மனின் அருளாலேயே தனக்கு கணித ஞானம் மேம்பட்டது என்று கூறிய சீனிவாச ராமானுஜன்தான் அவர்! கடவுளையும் கணிதத்தையும் இணைத்து அவர் கூறிய "கடவுளை நினைவுறுத்தாத ஒரு சமன்பாடு எனக்கு அர்த்தமில்லாத ஒன்றுதான்!" ( "An equation for me has no meaning, unless it represents a thought of God.") என்ற பிரசித்தி பெற்ற வாக்கியம் பொருள் பொதிந்த ஒன்று!


Seven Reasons Why a Scientist Believes in God

By

A. CRESSY MORRISON,
Former President of the New York Academy of Sciences

WE ARE STILL IN THE DAWN of the scientific age, and every increase of light reveals more brightly the handiwork of an intelligent Creator. We have made stupendous discoveries; with a spirit of scientific humility and of faith grounded in knowledge we are approaching ever nearer to an awareness of God.
For myself, I count seven reasons for my faith:

First: By unwavering mathematical law we can prove that our universe was designed and executed by a great engineering intelligence.
Suppose you put ten pennies, marked from one to ten, into your pocket and give them a good shuffle. Now try to take them out in sequence from one to ten, putting back the coin each time and shaking them all again. Mathematically we know that your chance of first drawing number one is one in ten; of drawing one and two in succession, one in 100; of drawing one, two and three in succession, one in 1000, and so on; your chance of drawing them all, from number one to number ten in succession, would reach the unbelievable figure of one in ten billion.
By the same reasoning, so many exacting conditions are necessary for life on the earth that they could not possibly exist in proper relationship by chance. The earth rotates on its axis 1000 miles an hour at the equator; if it turned at 100 miles an hour, our days and nights would be ten times as long as now, and the hot sun would likely burn up our vegetation each long day while in the long night any surviving sprout might well freeze.
Again the sun, source of our life, has a surface temperature of 10,000 degrees Fahrenheit, and our earth is just far enough away so that this "eternal life" warms us just enough and not too much ! If the sun gave off only one half its present radiation, we would freeze, and if it gave as much more, we would roast.
The slant of the earth, tilted at an angle of 23 degrees, gives us our seasons; if the earth had not been so tilted, vapors from the ocean would move north and south, piling up for us continents of ice. If our moon were, say, only 50,000 miles away instead of its actual distance, our tides might be so enormous that twice a day all continents would be submerged; even the mountains could soon be eroded away. If the crust of the earth had only been ten feet thicker, there would be no oxygen, without which animal life must die. Had the ocean been a few feet deeper, carbon dioxide and oxygen would have been absorbed and no vegetable life could exist.
It is apparent from these and a host of other examples that there is not one chance in billions that life on our planet is an accident.

Second: The resourcefulness of life to accomplish its purpose is a manifestation of an all-pervading Intelligence.
What life itself is, no man has fathomed. It has neither weight nor dimensions, but it does have force; a growing root will crack a rock. Life has conquered water, land and air, mastering the elements, compelling them to dissolve and reform their combinations.
Life, the sculptor, shapes all living things; an artist, it designs every leaf of every tree, and colors every flower. Life is a musician and has taught each bird to sing its love song, the insects to call one another in the music of their multitudinous sounds. Life is a sublime chemist, giving taste to fruits and spices, and perfume to the rose, changing water and carbonic acid into sugar and wood, and, in so doing, releasing oxygen that animals may have the breath of life.
Behold an almost invisible drop of protoplasm, transparent, jellylike, capable of motion, drawing energy from the sun. This single cell, this transparent mist-like droplet, holds within itself the germ of life, and has power to distribute this life to every living thing, great and small. The powers of this droplet are greater than our vegetation and animals and people, for all life came from it. Nature did not create life; fire-blistered rocks and a saltless sea could not meet the necessary requirements.
Who, then, has put it here?

Third: Animal wisdom speaks irresistibly of a good Creator who infused instinct into otherwise helpless little creatures.
The young salmon spends years at sea, then comes back to his own river, and travels up the very side of the river into which flows the tributary where he was born. What brings him back so precisely? If you transfer him to another tributary he will know at once that he is off his course and he will fight his way down and back to the main stream and then turn up against the current to finish his destiny accurately.
Even more difficult to solve is the mystery of eels. These amazing creatures migrate at maturity from ponds and rivers everywhere - those from Europe across thousands of miles of ocean - all bound for the same abysmal deeps near Bermuda. There they breed and die. The little ones, with no apparent means of knowing anything except that they are in a wilderness of water, nevertheless start back and find their way not only to the very shore from which their parents came but thence to the selfsame rivers, lakes or little ponds. No American eel has ever been caught in Europe, no European eel in American waters. Nature has even delayed the maturity of the European eel by a year or more to make up for its longer journey. Where does the directional impulse originate?

Fourth: Man has something more than animal instinct - the power of reason.
No other animal has ever left a record of its ability to count ten, or even to understand the meaning of ten. Where instinct is like a single note of a flute, beautiful but limited, the human brain contains all the notes of all the instruments in the orchestra. No need to belabor this fourth point; thanks to human reason we can contemplate the possibility that we are what we are only because we have received a spark of Universal Intelligence.

Fifth: Provision for all living is revealed in such phenomena as the wonders of genes.
So tiny are these genes that, if all of them responsible for all living people in the world could be put in one place, there would be less than a thimbleful. Yet these genes inhabit every living cell and are the keys to all human, animal and vegetable characteristics. A thimble is a small place to hold all the individual characteristics of almost three billion human beings. However, the facts are beyond question.
Here evolution really begins - at the cell, the entity which holds and carries the genes. That the ultra-microscopic gene can absolutely rule all life on earth is an example of profound cunning and provision that could emanate only from a Creative Intelligence; no other hypothesis will serve.

Sixth: By the economy of nature, we are forced to realize that only infinite wisdom could have foreseen and prepared with such astute husbandry.
Many years ago a species of cactus was planted in Australia as a protective fence. Having no insect enemies in Australia, the cactus soon began a prodigious growth; the alarming abundance persisted until the plants covered an area as long and wide as England, crowding inhabitants out of the towns and villages, and destroying their farms. Seeking a defense, entomologists scoured the world; finally they turned up an insect which lived exclusively on cactus, and would eat nothing else. It would breed freely, too; and it had no enemies in Australia. So animal soon conquered vegetable, and today the cactus pest has retreated - and with it all but a small protective residue of the insects, enough to hold the cactus in check forever.
Such checks and balances have been universally provided. Why have not fast-breeding insects dominated the earth? Because they have no lungs such as man possesses; they breathe through tubes. But when insects grow large, their tubes do not grow in ratio to the increasing size of the body. Hence there never has been an insect of great size; this limitation on growth has held them all in check. If this physical check had not been provided, man could not exist. Imagine meeting a hornet as big as a lion !

Seventh: The fact that man can conceive the idea of God is in itself a unique proof.
The conception of God rises from a divine faculty of man, unshared with the rest of our world - the faculty we call imagination. By its power, man and man alone can find the evidence of things unseen. The vista that power opens up is unbounded; indeed, as man's perfected imagination becomes a spiritual reality, he may discern in all the evidence of design and purpose the great truth that heaven is wherever and whatever; that God is everywhere and in everything that nowhere so close as in our hearts.
It is scientifically as well as imaginatively true, as the Psalmist said: The heavens declare the Glory of God and the firmament showeth His handiwork.