அறிவென்பது யாது?

அறிவென்பது யாது?(தமிழ்குடில் என்ற குழுவில் விவாதத்திற்கு எடுத்துக் கொண்ட கேள்வி)
''எல்லாப் பொருட்களிலும் எல்லா இடங்களிலும் இயக்க ஒழுங்காக இருப்பதுவே அறிவு'',
(Order of function in everything and everywhere is conciousness)
அறிவு ஐந்து வகைகளில் இயங்கு கிறது..
1 அகஅறிவு-.instinct. -தொடக்க அறிவு -பிறகும் போதே இருப்பது..( உ .ம்)மீன் குஞ்சு பிறந்த உடனேயே நீந்தத் தொடங்குவது,பிறந்த குழந்தை தாயிடம் பால் அருந்துவது.....
2 உள்ளுணர்வு-intution  --tution என்றால் வெளியில் இருந்து கற்றுக் கொள்வது...intution  என்றால் நன் உள்ளிருந்தே உணர்வாக அறிந்துகொள்ளும் அறிவு.
3 தேர்ந்த அறிவு- knowledge  --அக அறிவையும்,உள்ளுணர்வையும் கொண்டு வெளியுலகோடு நாம் பெரும் அனுபவங்கள்.....
4 .நுண் மாண் நுழை புலன் அறிவு- perpicasity  --நுண்ணிய மாண்மை பொருந்திய அறிவு--எது சரி, எது தவறு என்று அறிந்து..முற்கால அனுபவம்,தற்கால சூழ்நிலை,எதிர்கால விளைவு இவற்றை ஊகித்து செயல் செய்வது.
5 மெய்யறிவு-wisdom  --முற்றறிவு..மெய்பொருளை...இறைநிலையை உணர்ந்து தெளிவது...இந்த அறிவை நோக்கித்தான் சென்று கொண்டு இருக்கிறோம்.
அறிவு என்பது உயிருள்ள பொருட்களிலும் உயிரற்ற பொருட்களிலும் உள்ளது.ஜடப் பொருட்களில் உள்ள அறிவு இயக்கம் பெறாமல் அடங்கி இருபது.
உயிர் பொருளோடு தொடர்பு கொள்ளும் போது அந்த அறிவின் தன்மை வெளிப்படுகிறது..
அதனால்  நண்பர்களே யாரையும் 'அறிவில்லாதவன்'என்று கூறிவிட வேண்டாம்...அது நம் அறியாமையை வெளிப்படுத்தி விடும்..
பிறர் நம்மை'அறிவில்லாதவன் 'என்று கூறினால் அவர்மீது கோபம் கொள்ளாமல்..அவர் அறியாமையில் சொல்கிறார் என்று மன்னித்து விட்டு விடலாம்.(சினத்தை வெல்ல இதுவும் ஒரு வழி)

பதவி-பணி-பணிவு

கஷ்டத்தை நீ நன்கு கவனித்துப் பார்

வள்ளலார் பொன்மொழிகள்


இறை தன்மையும்; தொழில் ஸ்தாபனமும் - Part 2


இனிமையான வாழ்வு - Magarishi


இனிமையான வாழ்வு
நமது வாழ்வைச் சிக்கலில்லாமல் இனிமையாக அமைத்துக் கொள்ள வேண்டுமானால்;
உடலை நலமுடன் வைத்துக் கொள்ளவும், மனதைத் தெளிவாக வைத்துக் கொள்ளவும் வேண்டும்.

இயற்கை நீதி
விளைவு இலா வினையில்லை.
வினையினூடே விளைவு பல தொக்கி நிற்கும் இயற்கை நீதி.

எண்ணம்
மனிதனின் எண்ணமும் செயலும், ஆறு அடிப்படையில்தான் உருவாகின்றன.
அவை தேவை, பழக்கம், சூழ்நிலை, பிறர் எண்ணம், பாரம்பரியம், இயற்கை என்பனவாகும்.

உள்ளத்தில் ஊன்றும் எண்ணங்கள் நாளுக்கு நாள் உறுதி பெற்று, வாழ்வின் பயனாக விளைந்து விடும்.
ஆகவே, நமது வாழ்வு நலமுற வேண்டுமெனில் எந்தவிதமான கெட்ட எண்ணத்தையும் நமது உள்ளத்தில் ஊன்றவோ, வளரவிடவோ கூடாது.

தீய எண்ணங்கள் உள்ளத்தைக் கெடுப்பது போலவே உடலையும் கெடுக்கின்றன.

அமைதி
பிறர் குற்றத்தை பெரிதுபடுத்தாமையும், பொறுத்தலும் மறத்தலும் அமைதிக்கு வழிகளாகும்.

ஈதல்
எப்போதுமே தன்னிடமுள்ள ஆற்றலை வைத்துக் கொண்டு வாழ்க்கையில் பிறருக்கு உதவி செய்து இருப்பதுதான் ஈதலாகும்.

கடவுள் தன்மை, இயற்கைத் தத்துவம், வாழ்க்கைத் தத்துவம், ஞானம் முதலிய அனைத்துக்கும் குடும்பத்துள்ளேயே பாடங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
அப்படி இருந்தும் பலர் தோல்வி அடைகிறார்கள். எங்கோ சிலர் தான் வெற்றி அடைகின்றனர்.
அந்தப் பாடங்களால் நாம் புரிந்து கொண்டதை மதித்து நடந்தால் வெற்றிதான்.

Whatever one produces goes to the world society

Vethathiri Maharishi
1. Everyone born in the world lives for a certain period and dies. No one brought anything at birth expect hereditary imprints; no one can take anything when he leaves the world at death.

2. During the lifetime, one cannot eat food more than the digestible quantity; one cannot use clothes more than the weight he can carry; one cannot use land more than the area of 1'x6' when lying down, 3'x3' while standiing.

3. Whatever one produces goes to the world society, and whatever material wealth one saves is left behind to the society at the time of one's death

இறை தன்மையும்; தொழில் ஸ்தாபனமும்

என்னுடைய நண்பர்கள் சிலர் தொழில் ஸ்தாபனத்தில் இறை தன்மையின் பங்கு என்ன என்பது பற்றி விளக்குமாறு கேட்டுக்கொண்டதின் பேரில் இக்கட்டுரையை இறை அருளோடு எழுதுகிறேன்.



சிந்தனையாளர்களே, நீங்கள் இறை தன்மையை பற்றி சிந்திக்கத் தொடங்கியதே உங்களின் வினைப்பயன் என்பதை சிந்தனைக்குட்படுத்தி ஆராயுங்கள்.  அறிவும், ஞானமும், செல்வமும், குழந்தைகளும், பதவியும் நாம் செய்த அல்லது செய்யும்  வினைக்கேற்ப்பவே அமைகிறது.  இதை யார் சொல்லியும் நம்பாமல், சிந்தித்து தெளிவடையுங்கள் என்று வேதம் கூறுகிறது.



ஜாதகம் கணிக்கும் முன்பு அனைத்து ஜோதிடரும் பின்பற்றும் ஒரு ஸ்லோகத்தை இங்கு அடிக்கோடிட விரும்புகிறேன்.


ஜெனனீ ஜென்ம ஸெளக்யானாம் வர்த்தனி குலசம்பதாம் பத்வீபூர்வ புண்யானாம் லிக்யதே ஜென்ம பத்ரிகா.

இதன் பொருள் பிறப்பின் மகிழ்ச்சியை உண்டாகுவதும் குலச்செல்வத்தை விருத்தி செய்வதும் முன் நல்வினையின் வழியாக ஜெனன பத்திரிக்கை எழுதப்படுகிறது என்பது.

ஜோதிடம் உண்மைய பொய்யா என்று ஆய்ந்தறிய, காலம் மிகத் தேவைப்படும்.  அனுபவம் அடிப்படைத் தேவையாகிறது என்பதால்,அதனுள் சென்று அறிவாற்றலை விமர்சனம் செய்து வீணாக்காமல், பிறகு ஆக்கபூரவமாக தகுதியானவர்களிடம் கற்று தெளிவோம். 

இரவு, பகல், உதயம், அஸ்தமனம், தென்றல், புயல், தூறல், சூறாவெளி என்று இன்பதுன்பத்தை பிறிக்காமல் ஒன்றுள் ஒன்றாக நீதியோடு அளவு முறையோடு மற்றும் முறையான கால இடைவெளியோடு இறைத்தன்மை இயக்கிவருவதை சிந்தனை செய்து பாருங்கள்.  இறைவன் என்பது நபரல்ல. அவருக்கு கோபம், சந்தோஷம், துக்கம் இதல்லாம் வருவதாக என்னால் உணரமுடியவில்லை. ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்கும் பள்ளிக்கூடம் போன்று இவ்வுலகம் என் கண்களுக்கு புலப்படுகிறது.  நன்மை செய்தால் நன்மை, தீமை செய்தால் தீமை.  அதற்கு கால இடைவெளி உண்டு. இந்த நீதியின் அளவு முறையை உணர்ந்தவரே அறிவாளர்கள் என்றும், அறியாதவர்கள், சாதாரணமானவர்கள் என்றும் பிறிக்கபடுகிரார்கள். எது தவறு எது சரி அல்லது தர்மம் என்று தெரிந்து விட்டால் அளவுமுறை ஒன்றும் பெரிய விஷயம் அல்ல.

இந்த நீதியை தொழில் ஸ்தாபனத்தில் எப்படி கையாளுகிறோம் என்பது தான் அமைதியையும், உடல் மற்றும் மன நலத்தையும், பிறர் நம்மை மதிப்பதையும், சக தொழிலாளர்களின் நட்புறவையும்  நிர்ணயிக்கிறது.  இந்த  நான்கு அடிப்படைத் தேவையில் ஒன்று குறைந்தாலும், நாம் அதன் மூலம் பெரும் பொருளை ஆத்மபூர்வமாகவோ அல்லது சந்தோஷமாகவோ அனுபவிக்கவே முடியாது என்பது தான் உண்மை.  

குடும்ப அமைதியையும் தொழில் பாதிப்பதால், நாம் மிகவும் கவனமாகவும், நேர்மையாகவும் கையாள வேண்டும். ஆனால் இந்த கவனமும் நேர்மையும் அளவுக்கு மீறினாலும் அது நல்ல விளைவை ஏற்படுத்தாது.  மழை  உலகிற்குத் தேவை. அனால் இறைத்தன்மை காலத்தில் எப்படி அளவு முறையோடு கொடுக்கிறதோ அப்படி நடந்து கொள்ள வேண்டும்.

இறைத்தன்மை எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது .  இறைதன்மை நம் செயலால் வரும் விளைவை எப்போதும் தடுப்பதில்லை. அது நன்மையானாலும் தீமையானாலும் சரி. மேலும் நன்மையையும் தீமையும் பிறரால் வருவதும் இல்லை.  

நன்றாக உற்றுநோக்கினால் ஒரு சமுதாயத்தில் ஒரு தவறு நீண்டநாள் நடக்க இயற்க்கை அனுமதிப்பதில்லை.  காலத்தில் அதற்க்கு முட்டுக்கட்டை போட அறிவியல் சாதனங்களாகவோ  அல்லது தன்னலமற்ற தியாகியாகவோ இறைத்தன்மை வெளிப்பட்டும்.  இதையெல்லாம் தனியே அமர்து சிந்தித்து உணர்ந்தால், நமது ஆன்மா  தவறு செய்ய அஞ்சும் என்பது தான் உண்மை.  விளைவை உணராது குழந்தை நெருப்பில் கைவைக்கும் வீரசாகசம் போன்றதுதான் நமது மன ஓட்டம்.  விளைவை அறிந்த உடனேயே பயந்து நடுங்கும் இயல்புடையது.  அந்த இயல்பை பொருட்படுத்தாமல், தற்காலிகமாக அடக்குபவன் தான் வீரனும் சாதனையாளனும். 

இறைத்துகளின் பரிணாமமே அல்லது அழுத்தம் மற்றும் வேதியல் தன்மாற்றமே ஓரறிவு முதல் ஆறிவு வரை வியாபித்து உள்ளது. உயிருள்ளதுமாய் உயிரற்ற்றதுமாய் வியாபித்து உள்ளது.  நாம் செய்யும்  வினைக்கேற்ப உயிருள்ளதும் உயிரற்றதும் நமது இன்ப துன்பங்களுக்கு காரணமாகிறது.  நீதி தவறிய ஒருவனுக்கு உயிரற்ற இயந்திரங்களும் கை துண்டாவது விரல் துண்டாவது, மின் சாரம் தாக்குவது போன்று வினை பரிமாற்றம் விளைகிறது.  உயிருள்ள மனிதர்களாலும், விலங்கு, பறவைகளாலும்  நன்மை தீமை விளைகிறது.  உயிரற்ற பொருளால் ஏற்ப்படும் விளைவிற்கு நாம் எப்படி காரணம் என்று ஏற்கிறோமோ அதே  விளைவு தான் உயிருள்ள பொருள்களின் மூலமும் ஏற்ப்படும்.

இறைத்தன்மையையும், நீதியின் அளவுமுறையையும் பற்றி சிந்தித்தோம்.  பிரதானமாக அகற்றவேண்டிய அருங்குணங்கள் பற்றி சிந்திப்போம்.

பேராசை, சினம், கடும்பற்று, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் மற்றும் முறையற்ற பால் கவர்ச்சி 

இந்த அருங்குண சீரமைப்பு வாழ்வின் அடிப்படைத் தேவை.  எந்த இடத்திலும் செயலிலும் நம் சொல்லிற்கும் செயலிற்கும் மதிப்பிருக்க வேண்டடுமானால், வாழ்வில் ஒழுக்கம் இன்றியமையாதது. நம் மதிப்பை நாம் நிலை நாட்டாமல் நாம் எந்த துறையிலும் சாதிக்க முடியாது.  ஒழுக்கமாக நடப்பதை போன்ற நடிப்பை அரங்கேற்ற இறைத்தன்மை நீண்டநாள் இடம் கொடுப்பதில்லை.  மேலும் நம் மேல் நமக்கு சுயமரியாதை வேண்டுமானால், ஒழுக்கமாக நடிப்பதை விட, ஒழுக்கமாக நடப்பதே சாலச சிறந்தது. சமுதாயத்திற்கு நம் மேல் இருக்கும் மதிப்பின் பேரில் தான் நம் வாழ்வு  அமைதியாக அமையும்.  இச்சமுதாயத்தில் மனைவி, மக்கள், முதலாளி, தொழிலாளி என்று அனைவரும் அடங்குவர்.  உங்கள் மனைவிக்கு உங்கள் மேல் மதிப்பில்லை என்றால், கற்பனை செய்து பாருங்கள். வாழ்க்கையே போராட்டம் தான். அது போன்று தான் ஒவ்வொரு உறவு வட்டாரங்களும்.  நல்ல பெயரையும், மதிப்பையும் சம்பாதித்தால், இயற்கை மனித சக்தியை உருவாக்கிக் கொடுக்கும். அது வாழ்வின் அமைதியை நிர்ணயிக்கும்.  இதில் இறைத்தன்மையின் நீதியை சிந்தியுங்கள்.  ஒழுக்கம் - நன்மதிப்பு - மனித ஷக்தி  - அமைதியான வாழ்க்கை - மனைவி  - குழந்தை  - கர்ம நோயின்மை.  கர்ம நோய் என்று ஜோதிடம் குறிப்பிடுவது கேன்சர், எய்ட்ஸ் etc..நமக்கும், சமுதாயத்திற்கும் நன்மை தரும்  செயலை ஆய்ந்து அறிந்து செய்தால், அதன் விளைவே இறைநிலை.  செய்யும் விளைவாக பரமனிருக்க,  பண்ணிய பாவம் போக பரமனை நொந்தக்கால் என்ன பயன்.

இக்கருத்துகளை மேலோட்டமாக பார்க்கும் பொழுது, சற்று சம்மந்தம் இல்லாதது போன்று தோன்றும்.  ஆனால் தொழிலில் மட்டும் இல்லாமல், எல்லா இடங்களிலும் இறைத்தன்மையின் பங்கு இதுதான்.  இது தான் தொழில் தர்மம்.  நடைமுறை வாழ்வின் கண்ணோட்டத்தை அடுத்த பதிவில் எழுதுகிறேன். இந்த அடிப்படை தர்ம சிந்தனையே ஆதாரம் என்பதால், இதை எழுத விரும்பினேன்.

இவை அனைத்தும் என்னுடைய சுயமான கருத்துக்கள், இதில் தவறிருந்தால் என்னுடையதென்றும், புகழிருந்தால் குருவருள் என்றும் கொள்ளவும்.

தர்மோ ரக்ஷித ரக்ஷிதஹா - தர்மத்தை ரக்ஷிப்பவனை தர்மம் ரஷிக்கும்.


By Balaji.












































தகுதிக்குத் தக்கது தானே வந்து சேரும்


கணவன் மனைவி உறவு


குடும்பம் இல்லாமல் மனிதனுடைய வாழ்க்கையில் அமைதியோ, வெற்றியோ இல்லை. வேறு எந்த விதத்தில் வெற்றியோ, மகிழ்ச்சியொ வந்தாலும் குடும்பமின்றி அதை அனுபவிக்க முடியாது. அவற்றை அனுபவிப்பது, பாதுகாப்பது எல்லாம் குடும்பத்தில் தான் இருக்கிறது.

இல்லறத்தில் கணவன்-மனைவி உறவு மிகமிக மதிப்புடையது. அது சாதாரணமாக ஏதோ ஒருவருக்கொருவர் ஒத்துக்கொண்டு வாழ்வது அல்ல.

நீண்டகாலத் தொடராக வந்த வினைப்பயனாக-அதாவது நல்வினையானாலும், தீவினையானாலும் அவை தொடர்பாக காலம் முழுவதும் அனுபவித்துத் தீர்ப்பதற்கான தொடர்பு ஆகும். இந்தத் தொடர்பை நல்வினைத் தொடராகவே மாற்றிக் கொள்ளலாம். ஏதேனும் குற்றம் அல்லது குறை இருந்தாலும் கூட ஒருவருக்கொருவர் உணர்ந்து, ஒத்துப் போகக்கூடிய அளவில் மாற்றிக் கொள்ளலாம். அதற்குச் சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், தியாகம் ஆகிய மூன்று தன்மைகள் வேண்டும்.  

காலையில் எட்டு மணிக்கு அலுவலகம் செல்ல வேண்டும். இன்னும் உணவு தயாராகவில்லை. உணவு வேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள், நேரம் கடந்து கொண்டிருக்கும், கொஞ்சம் சகித்துக் கொண்டால் போதும். இங்கே உணவ ஆகவில்லை. எட்டு மணிக்கு அலுவலகம் போக வேண்டும். அலுவலகத்தில் உள்ள கடையில் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டுப் போகலாம். இவ்வாறு விட்டுக் கொடுப்பதில் தவறு ஒன்றுமில்லை.
___

கேள்வி: இன்றைய கால மாணவர்கள் பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் போராட்டமான நிலையில் இருந்து வருகிறார்கள். அவர்கள் இதிலிருந்து தெளிவு பெறுவது அதாவது மனக் குழப்பத்திலிருந்து விடுபடுவது எவ்வாறு என்று கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

வேதாத்திரி மகரிஷி: மனதுக்குப் பயிற்சியளிக்க வேண்டும். உடலுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். அதாவது இரண்டு விதத்தில் உடலுக்குப் பயிற்சி வேண்டும். இது வரையில் செய்த செயல்களினால், இந்த அணு அடுக்குகள் எல்லாம் சீர் குலைந்துபோய் நோய் பதிவாகியிருக்கும். அவையெல்லாம் போக்குவதற்கும், இனி நோய் வராமல் இருப்பதற்கும் தக்க பயிற்சி உடற்பயிற்சி அவசியம்.அதற்கும் மேலாக எல்லோருக்கும் கருமையம் களங்கப்பட்டு இருக்கிறது. அதைத் தூய்மை செய்வதற்கு காயகல்பப் பயிற்சி என்று இதிலேயே ஒரு பயிற்சி இருக்கிறது. வித்து சுத்தம் செய்யும், உயிர்ச்சக்தியை அதிகரிக்கும். அதே நேரத்தில் சீவ காந்த சக்தியையும் அதிரிக்கும். இந்த மூன்றையும் திருத்தி கருமையத்தையே தூய்மை செய்யக்கூடியது வளப்படுத்தக் கூடியது காயகல்பப் பயிற்சி. அதுவும் மனவளக்கலையில் சேர்ந்துதான். அதைச் செய்தால்தான் மாணவர்களினுடைய மனநிலை சரியாக, தெளிவாக இருக்கும். மேலும் மேலும், முயற்சி விடா முயற்சி நன்மை தரும்.

எண்ணம்
எண்ணங்களை கையாளத் தொடங்கி விட்டால் எல்லாமே இன்பமயம் தான். பூரணமான அமைதி நிலை பெற்ற மனதில் ஆனந்தம் நிலைத்து நிற்கும். எண்ணமே நம் வாழ்வைச் செதுக்கும் சிற்பி என்றால் அது மிகையில்லை.

சிந்தனை
இயற்கையை நுணுகி, அதனுடைய அமைப்பை, இயக்கத்தை, இயக்க ஒழுங்கை, அதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை, அறிந்து கொள்ளக் கூடிய ஒரு திறன் ஆர்வம், செயல் இது தான் சிந்தனை.

அன்பு
அறிந்தது சிவம், மலர்ந்தது அன்பு. அன்பு வேறு சிவம் வேறு அல்ல. சிவத்தை உணர்ந்ததால் அன்பாக மலர்ந்தது.

சினம்
பிறர் மீது சினம் கொள்ளும்போது, அந்தக் குறைக்கு உங்களிடம் தவறு உள்ளதா என்று முதலில் பாருங்கள்.

துன்பம்
மனிதனின் துன்பமெல்லாம் இயற்கையை அறியாமலும், அல்லது அறிந்தும் அதனை மதியாமலும் அவன் நடந்து கொள்வதாலேயே தோன்றுகின்றன.

அறநெறி
திருந்திய செயல்களினால் இன்ப துன்பங்களையும், அதன் அளவுகளையும் மாற்றியமைத்துக் கொள்கின்ற செயல் திறமைகளே அறநெறி.

வேண்டுவதும், கிடைப்பதும்
நீ புகழை விரும்புவாயேல், அந்தப் புகழ் வேட்பே நீ விரும்புகின்ற புகழை விரட்டுகின்ற சாட்டையாகும்.

அகத்தவம்
அகத்தவம் தீவினை அகற்றும் அருள் நெறியை இயல்பாக்கும்
அகத்தவமே இறைவழிபாடு அனைத்திலும் ஓர் சிறந்த முறை
அகத்தவமே உயிர்வழிபாடு அதனை விளக்கும் ஒளியாம்
அகத்தவமே மதங்கள் எல்லாம் அடைய விரும்பும் முடிவு


தற்பெருமை
தற்பெருமை பேசுபவர் தன்முனைப்பு மீறி
தவறென்று பிறர் செயலை பிறரை குறை கூறும்
அற்பமனம் உடையோர்கள் சிலர் இருப்பார் நம்மில்.
அன்புகொண்டு அவர்களையும் அரவணைத்தே நமது
சொற்க்கனிவால் வாழ்த்தி அவர் சிந்தனையை உயர்த்தி
சூட்சுமமாய் அவர் உயிரை அறிவை அறிந்துய்ய
நற்பணியை செய்திடுவோம் சமுதாயத தொண்டாய்.
நம் தகைமை பொறுமைகளைச சோதிக்க வாயப்பாம்.

வாழ்த்து
பிறர் நலமாக வாழ வேண்டும் என்ற நினைவோடு எழும் ஓர் ஒலியே வாழ்த்து என்ற வார்த்தையாகும். வாழ்த்து என்றாலே அதை நினைக்கும்போதும், அதை சொல்லும்போதும் மனத்திலே ஓர் அமைதியான இயக்கம் ஏற்படும்.

"வாழ்க வளமுடன்" என்று மற்றவரைப் பார்த்து சொல்லும்போது எல்லாப் செல்வங்களையும் உங்களுடைய வாழ்க்கையில் பெற்று சிறப்பாக வாழ வேண்டும் என்று கருத்தை உள்ளடக்கியதாக அமைகிறது என்று வேதாத்திரியம் கூறுகிறது.
வாழ்க என்ற வார்த்தையில் உள்ள 'ழ்' என்ற சிறப்பான எழுத்தை உச்சரிக்கும்போது நமது நாக்கு மடிந்து மேலண்ணத்தில் நன்கு தொட்டு அழுத்துகிறது. இந்த அழுத்தம் உள்ளே இருக்கும் பிட்யூட்டரி சுரப்பியையும், பீனியல் சுரப்பியையும் நன்கு இயக்குவதற்குத் தூண்டுகிறது. உடலியக்கத்திற்குத் தலைமைச் சுரப்பி பிட்யூட்டரி சுரப்பி. மன இயக்கத்திற்கு தலைமைச் சுரப்பி (Master Gland) பீனியல் சுரப்பி. இவ்விரு சுரப்பிகளுகம் இயக்கம் பெறுவதால் நமது உடல்நலமும், மன நலமும் சிறப்படைகின்றன.
பீனியல் சுரப்பியை 'மனோன்மனி' என்றும் அழைக்கின்றனர். மனத்திற்குரிய ஒரு நல்ல ஆற்றல் உள்ள கருவி என்பதற்காக மன+உள்+மணி என்ற 3 வார்த்தைகளைச் சேர்த்து மனோன்மனி என்று சொல்லப்படுகிறது. மனத்திற்கு உட்பொருளாக உள்ள இரத்தினம் என்பது பொருள். அதனால் நாம் வாழ்த்தும்போது மனோன்மனியோடு தொடர்பு கொண்டு எண்ணற்ற பலன்களை பெறுகிறோம்.

வாழ்க வளமுடன் என்ற மந்திரத்திற்கு வலு அதிகம். தவம் செய்த முடிக்கின்ற போது சொல்லும்போது வாழ்த்துக்கு இன்னும் வலிமை கூடுகிறது. உதாரணமாக ஒரு வில்லில் அம்பு எய்வதற்கு எவ்வளவு தூரம் நாணை இழுக்கிறோமோ, அந்த அளவுக்கு அம்புக்கு வேகம் கூடும். அதுபோன்று மனம் எவ்வளவு அமைதி நிலையிலிருந்து வாழ்த்துகிறதோ அந்த வேகத்தில் அந்த வாழ்த்து செயலுக்கு வரும்.

வாழ்த்து அலை
வாழ்த்து என்பது அலை. இந்தச் சீவகாந்த அலைக்கு 5 வகையான இயக்கங்கள் உள்ளன.
1 மோதுதல் (Clash)
2 பிரதிபலித்தல் (Reflection)
3 சிதறுதல் (Refraction)
4 ஊடுருவதல் (Penetration)
5 இரண்டிற்கும் இடையே ஓடிக் கொண்டிருத்தல் (Interaction)

ஒருவர் மற்றவரை வாழ்த்தும்போது அந்த வாழ்த்து இருவருக்கிடையே ஓடிக் கொண்டே இருக்கும். இவ்விருவருக்கும் இடையே ஓர் உயிரோட்டம் உண்டாகி விடுகிறது. அது ஆயுள் முழுவதும் இருக்கும். நீங்கள் அன்போடு நல்ல எண்ணத்தோடு பாய்ச்சி விட்டால் போதும். அவர் உங்களை பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் அவரது உயிரிலிருந்து நன்மையான அலை வீசிக் கொண்டே இருக்கும்.

வாழ்த்தின் நன்மை
1 "வாழ்க வளமுடன்" என்று சொல்லும்போது பிறர் உள்ளத்திலே நமது கருத்தும் உயிராற்றலும் ஊடுருவி இரண்டு பேருக்குமிடையே ஓர் இனிய நட்பை வளர்க்கிறது.

2 இந்த வாழ்த்துப் பயிற்சியினால் சினம் அடிக்கடி வருவதைத் தவிர்க்கலாம்.

3 அப்படி வாழ்த்தி, வாழ்த்தி எப்பேர்பட்டவர்களையும் நண்பர்களாக மாற்றி பகைமையைத் தவிர்க்கலாம். அவர்களுடைய செயல்களைத் திருத்திவிட முடியும்.

4 ஒரு செடியைப் பார்த்துக் கூட "வாழ்க வளமுடன்" என்று சொன்னால், அந்தச் செடியில் இருக்கக் கூடிய பலவீனம் நீங்கி அது நல்லதாக மாறும்.

+ அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

ஆன்மா என்பது என்ன? (வேதாத்திரி மகரிஷி அவர்களின் நூலின் வாயிலாக அறிந்துக் கொண்டது)


ஆன்மா என்பது என்ன? (வேதாத்திரி மகரிஷி அவர்களின் நூலின் வாயிலாக அறிந்துக் கொண்டது)

வாழ்க்கை என்பது பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்டது. நமக்கு பிறந்த நாள் தெரியும். இறந்த நாள் தெரியாது. ஒரு நாள் இறக்கப்போவது திண்ணமே. ஆயினும் அது எந்த நாள் என்பது யாருக்கும் தெரியாத ஒன்று. மனிதப் பிறவிக்கான உடலமைப்பு நூற்றி இருபது ஆண்டுகள் வாழும் வகையில் தான் அமைக்கப் பட்டு இருக்கிறது. எனவே எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பது நாம் உடலை பராமரிக்கும் விதத்தில் தான் அமைந்து இருக்கிறது.

உடலானது பஞ்ச பூதங்களின் (ஐந்து பௌதிகங்களின்) கூட்டு. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவற்றின் கூட்டே மனித உடல். மனிதனின் உடல் நலம் என்பது அவன் உடலில் ஓடிக் கொண்டு இருக்கும் இரத்தம், வெப்பம், மற்றும் சுவாசம் ஆகிய ஓட்டங்களின் சீரமைப்பில் தான் உள்ளது. நீரானது நம் உடலில் இரத்தமாகவும், நெருப்பு என்பது உடலின் சூட்டையும், காற்று என்பது நமது சுவாசமாகவும் அமைகிறது. நிலமானது நமது உடலாகவும் விண் என்ற
ஆகாயம் உயிராகவும் உள்ளது. உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவினை பலபடுத்த இந்த மூன்று ஓட்டங்களும் நன்றாக செயல் பட வேண்டும்.

உயிரானது எங்கு இருக்கிறது என்று கேட்டால் பொதுவாக நாம் நமது இதயத்தையே காட்டுவோம். ஆனால் உயிரானது நம் உடல் முழுவதும் ஓடிக்
கொண்டே இருக்கிறது. அவ்வாறு ஓடும் உயிரிலிருந்து வரும் அலைகள் காந்த அலைகளாக மாறி நம் உடலை நடத்துவதற்கு போதிய சக்தியி அளிக்கிறது
இதே அலை மூளை வழியே செல்லும்போது மனமாக இருக்கிறது. மனதினால் எண்ணுவதை, வாயினால் சொல்லி உடலால் செய்கிறோம். இவை முறையே எண்ணம் சொல் செயல் எனப்படுகிறது. நாம் அடையும் இன்ப துன்பங்களுக்கு காரணமே நம்மில் ஏற்படும் எண்ணங்கள் சொல்லபடுவதும் செயல்படுத்தப் படுவதும். நம்முடைய எண்ணம் , சொல், செயல் என்பது நம் உடலிலே காந்தத்தில் பதிவாகிறது. இவ்வாறு திணிவு பெற்ற காந்தமே ஆன்மா எனப்படும்.

New Moon - Full Moon and Human Mind


New moon and full moon place a important role in the spiritual path. It's gravitational effects on the earth is enormous due to its proximity to the earth and its short duration to revolve the earth . 

Like we are unable to realize the speed of the earth when we are on the earth .we as living beings are unable to realize the subtle gravitational fields of the planets. Those who have reduced the mind frequencies and under-stood with the natures frequencies felt its immense effects and uses . Those great realized souls have devised many methods to avoid bad effects and to take benefits out of it. 

LikeWise moons gravitational field immensely effects the bio magnetism and tries to pull upwards towards the moon. Like water tides are high during the these days. So many religions make these days as auspicious days to connect with godliness as it promotes to leave this earth gravity and expand the soul energy or bio magnetism. Along with bio magnetism mind is also carried away. 

Many old people who are about to die normally die during new moon or full moon, most of the saints get enlightened during these days ( enlightenement happens mostly in full moon day only mahaveera got enligtened in new moon day ) ,psychological disorders goes abnormal during these days. 

Great understanding of this scientifically and spiritually helps to realize the self . Kundalini yogi can easily feel the effects of new moon and full moon gravity and can make use of it through meditations.
Doing pancha pootha navagraha / five elements- nine planets meditations during these gives greater benefits of planets. 

Full moon day -auspicious for thuriyatheetha meditation
New moon day - auspicious for pancha pootha navagraha / five elements- nine planets meditation

OTHERS CANNOT HARM YOU

You must understand the simple fact that no-one can harm another according to his whims fancies. Sufferings come to you under the law of cause-and-effect; and the person who causes the suffering is only agent of this Law.

Everyone carries within him the imprints of his Karma. When a person does something wrong, something sinful, he has to bear the consequences of such actions. Nature has to bring out and erase the imprints of sins and thus purify him. This process of purification may sometimes be achieved by the individual's own action that may result in pain or suffering to him. At other times the pain or suffering may come to him through the action of others.

Whatever be the agency through which pain comes, you must not forget that the cause was in your own deeds and that the suffering that falls to your lot is meant to purify you.

The individual who causes pain to you is only an instrument in the hands of Nature. His own Karma has made him do harm to you. He will have to bear the consequences of his actions sooner or later, but that is not your concern.

What you must constantly remember is that nothing in the Universe can bring you suffering unless your actions warrant it.

Most appreciated in each religion

Most appreciated in each religion

1.Buddhism - Research
2.Jainism - Love to all living beings
3.Hinduism - Belief
4.Islamism - Prayer
5.Christianity - Service

மன்னிப்பு


எளிமையே மரியாதை