மனிதனிடம் இறை அருள் எப்படி வெளிப்படுகின்றது

நாம் இறை அருள் வெளிப்பாட்டை பல வகையில் கேள்விப்பட்டிருப்போம்.  விஸ்வரூப தரிசனம், ஒளிவட்டம் etc.  வேறு ஒரு கோணத்தில் இறை அருளை சிந்திப்போம்.  எந்த அடிப்படையில்?

இறை அருளைப்பெற்றவன், கண்டிப்பாக எவ்வழியிலும் கஷ்டப்பட மாட்டான்.  ஆனால் இறை அருளைப் பெறாதவனோ துன்பப்படுவான்.  இதன் அடிப்படையில் தான் உலக சுகங்களை அடைய நாம் இறைவனை நாடுகிறோம் அல்லவா? நம் வேண்டுதல்களை  உற்று நோக்குங்கள்.

சிறுவயதில் - நான் தேர்ச்சி பெற வேண்டும். பின் வேலை கிடைக்க வேண்டும்.

திருமணம் ஆக வேண்டுதல்கள் பல.   பின் சுமுகமான திருமண வாழ்வின் தடைகள் அகல பரிகாரம்.  குழந்தை ...., உடல்நலம் ,....குழந்தையின் கல்வி .....Etc.  இத்தனை வேண்டுதல்களும்  நிறைவேற நாம் இடும் தக்ஷனை ரூபாய் 10 அல்லது 20 .

துன்புருபவன் இறையருள் பெறாதவன், இன்புருபவன் இறையருள் பெற்றவன் அல்லது புண்ணியசாலி என்ற அடிப்படை கருத்தை சிந்தித்தபடி கீழ் வருவனவற்றை ஆராய்வோம். 

இன்புருபவன் இறையருள் பெற்றவன் 

Financial Intelligence உள்ளவர்கள், நிதி சூழ்நிலைகளை திறம்பட கையாண்டு பணம் அவர்களின் திறமையால் பணம் படைத்தவர்களாக உள்ளனர்.

Music Skills உள்ளவர்கள் அவர்களின் திறமையால்   கச்சேரி, தொலைக்காட்சி நிகழ்ச்சி என புகழுடன் உள்ளனர்.

நடிக்கும் திறமை படைத்தவர்கள், அத்திறமையால் உலகப் பிரபலமாகி, புகழுடனும், பணத்துடனும் வாழ்கிறார்கள்.

துன்புருபவன் இறையருள் பெறாதவன்.

திறமை அல்லது பரிட்சயம் இல்லாத ஒரு வாகன ஓட்டியின் அறியாமையால்  தனக்கும் பிறருக்கும் விபத்து நேர்கிறது.

அறிவியல் வளர்ச்சியை அறியாத ஒரு பாமர மனிதனின் அறியாமையால் இன்றும்  இயந்திரங்களின் உதவி கொண்டு எளிமையாக செய்யக்கூடிய வேலையை பழைய முறைகளை பாரம்பரியம் என்ற பெயரில் அறியாமையால் பின்பற்றி காலத்தையும் உடல் உழைப்பையும் வீணாக்கி துன்புறுகிறான்.   பாரம்பரியம் கடைபிடிக்க வேண்டிய  செயல்களை Modern என்ற பெயரில் பின்பற்றாமலும் துன்புறுகிறான்.

உதாரணம்.  Mixie, Grinder பயன்பாடு   மற்றும்  தமிழை தமிழ் நாட்டிற்குள் பேசுவதற்கு தயக்கம். மொழிழ்ப் பயன்பட்டிற்குள் ஒருவனின் வாழ்க்கைத் தரம் Status தாக்கம் குறுக்கிடுவதே அறியாமைதான்.

மருத்துவ வளர்ச்சியை அறியாதவர்கள் நோயினால் துன்பப்படுவது. விதி என்று அறியாமையால் முடங்கி இருப்பது.

ஒருவேலை இறையருள் திறமை சாலிகளுக்கு மட்டும் தானோ?  அல்லது கடினமாக உழைப்பவர்களுக்கு மட்டும் தானோ?

அறிவில்தான் மனிதன் வேறுபடுகிறான் என்பதை ஒப்புக்கொள்ள முடிந்தால், அறிவேதான் இறையருள் என்பது புரியும்.

ஆழமாக சிந்தித்தால் நாம் இறைவனின் அத்தனை பெருமைகளையும் உணர்வதே அறிவால் தான்.

இன்னும் ஆழமாக சிந்தித்தால் அறிவைத் தருவதே இறைவன்   தான்.

 ஒருவேளை நாம் மனநிலை பாதிக்கப்பட்டு பிறந்திருந்தால், இறைவனைக் கூட அறியமுடியாது, எங்கே திறமை அடைவது.

நம்மிடம் உள்ள இறைஅருளை வெளிக்கொணர,  கடினமாக உழைக்கவேண்டும். உழைத்தால் திறமை வரும், வந்தால் இறைவன் அருள் வரும் ...

என்ன Sir இது உழைப்பின்றி இறைவன் அருள் கூட கிடைக்காதா......!

நன்றியுடன் 
பாலாஜி 



அடிப்படை இல்லாத பக்தி அறியாமை

படிக்காமல் தேர்ச்சி பெற வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவது.
முயச்சி செய்யாமல் வேலை கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதல்.

இறைவனின் உருவம் மட்டுமே இறைவன் என்றும் கோயிலில் மட்டுமே அவன் உறைகிறான் என்றும் எண்ணுவது.

உதாரணம் :அன்று சிவன் பாதுகாப்பிற்காக ஈட்டி வைத்திருந்தார் என்றால், இன்று அதைவிட மேலான நவீன ஆயுதம் வேண்டும்.  உருவம் மட்டும் இறைவன் இல்லை..


நான் இறைவனை உண்டாக்கின பெரியோர்களை வணங்குபவன். ஏனென்றால் அடிப்படை சாமான்ய மக்களுக்கு தத்வார்த்தமான விஷயங்களை புரியவைப்பதின் கடினத்தன்மையை நன் உணர்கிறேன்.

அவர்களுக்கு உழைப்பதற்கும், உழைத்தக்  களைப்பில் உறங்குவதற்கும் நடைமுறையில் நேரம் சரியாக இருக்கிறது.

அவர்களும் படைப்பின் மூலத்தை உணர்ந்து அமைதியாகவும் மெய்யறிவுடனும் வாழ  வேண்டும் என்பதே இறைவன்  படைக்கப்பட்டதன் நோக்கம்.  அறியாமையே அனைத்து துன்பத்தின் பிறப்பிடம்.

எல்லாம் நம் முயற்சியால் மட்டும் நடைபெறுகிறது என்பதும் அறியாமை தான்.

விதை விதைத்தால் தான் அறுவடை செய்யலாம் அனால் உலகின் முதல் விதையை விதைத்தவன் யார்?

சமைக்க தெரியாதவனுக்கும் சாம்பார் ஒருநாள் நன்றாக சுவையுடன் அமையலாம்.  அனால் சாம்பார் தினமும் அதே சுவையுடன் அமைய வேண்டும் என்றால் சமையல் அறிவு வேண்டும்.   Ingredients மற்றும் consistency  துல்லியமாக அறிந்திருக்க வேண்டும்.  கண்களை மூடி மந்திரம் ஜெபித்தால் இந்த யுகத்தில் சாம்பார் வராது.  சாம்பார் மட்டும் அல்ல எதுவுமே சாத்தியம் இல்லை.

இந்த படைப்பினை உற்று நோக்கினால் அனைத்தும் Pattern, Precision and regularity அதாவது அமைப்பு, துள்ளியம் மற்றும் இயக்க ஒழுங்கு இன்ற அடிப்படையில் ஒரு நீதியோடு இயங்கி வருகிறது.

நெருப்பு என்றால்எரிதல் , எரித்தல், சுடுதல் சுற்றி பரவுதல் என்பது அதன் இயல்பு மற்றும் இயக்க ஒழுங்கு .  குழந்தை தெரியாமல் தொட்டாலும் சுடும், ஒரு ஞானி தெரிந்து தொட்டாலும் சுடும்.  சுடும் என்ற அறிவே, சுடுதல் என்றபாதிப்பிலிருந்து நம்மை காக்கும்.  

அறியாமை நம்மை எரித்துவிடும்.

இறைவன் செய்யும் செயலின் விளைவாகவே வெளிப்படுகிறான்.  இறைவனின் எல்லையற்ற இயல்பை உணர்ந்தால் வேண்டுதல் என்பதே எழாது.  நாம் வேண்டியதாலா  கடல் உண்டானது,  மலை உண்டானது ?  காலத்தால் மாற்றம் அடைவதே நன்மையையும் தீமையும்.

துன்பம் இன்பம் என்பது தனிமனித அனுபவமே.  பேருந்தின் கடைசி இருக்கை நமக்கு நரகம் அனால் கல்யாணம் ஆன புது தம்பதியர் சொர்க்கம் என்று கருதலாம். பேருந்தின்  ஒவ்வொரு வளைவிலும் இன்பமான அனுபவன்கள்.

அடிப்படையை உணர அமைதி வேண்டும். அமைதிக்கு ஒழுக்கம் வேண்டும். 

அறிவே இறைவன்.

By,
Balaji











அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கப்பாலாய்…-- இறைவன்

எந்த ஒரு பொருளினுள்ளும் புரோட்டன், நியூட்ரான் மற்றும் எலக்ட்ரான்களே இயக்க நிலையிலோ அமைதி நிலையிலோ உள்ளன.

நம் உடலினுள்ளும் அதே அணுககூட்டமைப்பே உள்ளன.

அப்படியானால் நாமும் எல்லா பொருள்களும் ஒன்றா?

அணுக்களின் மாறுபட்ட இயக்கம் மற்றும் மோதுதலால் ஒலி மற்றும் ஒளி  உண்டாகிறது.  உதாரணம் Microwave Oven.

எலக்ட்ரானின் ஓட்டமே மின்சாரம்.

பெரும்பாலான எல்லாவற்றையும் மின்சாரம் தான் இயக்குகிறது என்றால் இறைவன் தான் அந்த மறைந்துள்ள மறை பொருளா?

அணுக்களின் சுழற்சி விசையால் உருவாகும் ஈர்ப்புவிசையே காந்தம்.

மின்காந்த விசை அணுக்களால் விளைகிறது. மனித ஆவிகளை (Gost) அல்லது உயிரை Electro Magnetic Rays Detector மூலம் கண்டறிகிறார்களே ! உடலில்லா உயிரும் அணுக்களின் தொகுப்பா?

மனித உயிரும் இறைவனும் ஒன்றா ? அப்படியானால் செய்யும் செயலின் விளைவால் உண்டான பதிவினால் மட்டும் தான் மனிதன் வேறுபடுகிறானா?

உண்ணும் உணவும், அதை உருவாக்கின மரம், செடி, கொடிகளும் அணுக்களே 

அதை உண்டு வளரும் உடலும், அதனுள் உறையும் உயிரும் அணுக்களே

காற்றில்லா  இடத்திலும் நுழைந்த, ப்ரம்மாண்டம் முழுவதும் நிறைந்த ஈதறிக் பார்டிக்கள் முழுவதும் அணு.

நீரும் அணுகூட்டமைப்பே , அணுவின் இடைவெளியுடன் கூடிய இயக்கமே காற்று.   மோதுதலால் வெப்பம் மேலும் அதிர்வதால் ஒலி.

இதனால் தான் அபிராமி அந்தாதியில் அணுவிற்கும் அணுவாய் என்று குறிப்பிட்டனரோ ?

அதனால் தான் விஷ்ணுவின் பெயர் விஷ்ணும் (எல்லாம் ) என்று ஆனதோ ?

செய்யப்படும் யக்ஞம் நான் தான்.  எதனால் செய்யப்படுகிறதோ அந்த பொருள்களும் நான் தான்.அதை அனுபவிப்பவனும் நானே, செய்பவனும் நானே. அதனால் விளையும் பயனும் நானே.

உலகில் வெற்றி தோல்வி என்பதே கிடையாது. விளைவு (Result and Consequence) மட்டும் தான் உண்டு.

இந்த விளைவுதான்  இறைவனா?

Witten By 
Balaji.