நினைவில் வைத்துக் கொள்!*

* ஒருவரை புகழ்ந்து பேசுவதற்கும் கட்டுப்பாடு அவசியம். ஒரேயடியாக புகழ்ந்தால், மனதில் அகங்காரம் உண்டாகி விடும்.

* பொழுதுபோக்கு என்ற பெயரில் நேரத்தை வீணாக்குவது கூடாது. பிறருக்கு சேவை செய்ய முன் வந்தால், அதுவே பயனுள்ள பொழுதுபோக்கு.

* எண்ணத்தால் நம்மை தூய்மைப்படுத்தவே வழிபாடு செய்கிறோம். நாம் செய்யும் பூஜையால் கடவுளுக்கு ஏதும் ஆகப் போவதில்லை.

* மனதால் தான் எல்லாவிதமான துன்பங்களும் உண்டாகின்றன. 

"ஆசைப்படாதே' என்று இந்த மனதை இழுத்துப் பிடித்து நிறுத்துவது அவ்வளவு சுலபம் அல்ல.

* செய்த பாவத்திற்கான தண்டனையும், புண்ணியத்திற்கான நன்மையும் நம்மை ஒருநாள் வந்து சேரும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

- காஞ்சிப்பெரியவர்

No comments:

Post a Comment