கர்மா



தொழில் ஸ்தாபனத்தில் இறைநிலையின் பங்கு என்ன என்பதை விளக்கும் வேளையில், பலரின் புரிதல் வேறுவிதமாக உள்ளதை உணர்கிறேன். கர்மாவை அறியாமல் வேறு உயர் கருத்துகளை உள்வாங்கி நடைமுறைப் படுத்துவதில் சிக்கல் உள்ளது. கர்மா என்றவுடன், இது ஆன்மிகம் என்று படிப்பதை நிறுத்தி விடவேண்டாம். உலக நன்மையின் பொருட்டு, அறிவியல் பூர்வ மாக உணர்த்த முயல்கிறேன்.

கர்மா என்பதை ஒரு மாயாஜாலம் போன்றோ அல்லது ஒரு மந்திர சடங்கை போன்றோ அல்லது ஜோதிடரின் ஏமாற்றும் திறமையையும் உடனே சிந்திக்கும் ஒரு மனநிலை நம்மிடம் புகுத்தப்பட்டுள்ளது.

ஒரு செயலுக்கு ஒரு விளைவு. இவ்வளவு தான் கர்மா. கர் என்றால் வட மொழியில் செய் அல்லது செய்தல் என்று பொருள். கர்மா என்றால் செயல் என்ற பொருள். 

கர்மா என்றவுடன் பெரிதாக கொலை கொள்ளை போன்ற பாவங்களை பற்றி சிந்திக்க வேண்டாம்.

நடைமுறை உதாரணத்திற்கு, தங்கள் மனைவி ஒரு கப் தேநீர் கொடுக்கிறார்கள், கவனக்குறைவால் ஒரு சொட்டு கீழே சொட்டிவிட்டது. டைல்ஸ் தரை அழுக்காகி விட்ட கோபத்தில் தாங்கள் "அறிவில்லையா கீழே சிந்திவிட்டதே" என்று தாங்கள் சற்று கோபத்துடன் சொல்ல அதற்கு அவர்கள் ஏதோ சொல்ல, கையில் இருக்கும் கப்பை தேநீருடன் தூக்கி எறிகிறீர்கள். முன்பு ஒரே ஒரு சொட்டு. அதற்கு திட்டின நாமோ கப்பையும் உடைத்து, மேலும் தேநீர் முழுவதையும் கொட்டிவிட்டோம்.

யோசித்து பாருங்கள் இந்த உணர்ச்சிவயப்பட்ட செயலுக்கு, கடவுளோ, கர்மாவொ காரணம் என்று கூறமுடியுமா? இந்த கோபத்துடன் மனைவியோடு கோவிலுக்கு சென்று என்ன வேண்டுவீர்கள்? தெய்வத்திற்கும் இந்த கஷ்டத்திற்கும் என்ன சம்மந்தம். அடிப்படையை உணராமல் மீண்டும் மீண்டும் வேண்டினால்......காலம் அதிலேயே சென்றுவிடாதா?

நன்றாக உற்றுப் பார்த்தல் நம்முடைய கோபம், நம் நலம் விரும்பிகளிடம் மட்டும் சற்று அதிகமாக வருகிறதே? காலை முதல் மாலை வரை நம்மையே நினைத்து நம் நலத்திற்காகவே உழைக்கும் மனைவி,கணவன் , அம்மா அப்பா இவர்களிடம் தான் பெரிய காரணமின்றி பெரிய கோபம் :-)

நம் செய்கையை பற்றிய உற்றுநோக்குதல் நம்மிடம் இல்லாமல், தெய்வத்தை உணர்வதால், பெரிய பயன் ஒன்றும் கிட்டிவிடாது என்பதை உறுதியாகக் கூறலாம்.

இந்த செயலுக்கு வருந்திய நீங்கள் மன்னிப்பு கேட்கவேண்டியது கடவுளிடமா?

உணர்ச்சி வயப்பட்ட நிலையில், தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, உடலுக்கோ, மனதிற்கோ துன்பம் விளைவித்தால் அது பாவம் எனப்படும்..

மிகுந்த இன்பமோ, துன்பமோ இல்லாமல் அமைதியான மனநிலையுடன், தற்காலத்திலும், பிற்காலத்திலும், பிறருக்கும், நமக்கும், உடலுக்கும் மனதிற்கும் இன்பம் பயக்கும் செயல் புண்ணியம் எனப்படும்.

இந்த புண்ணியமும், பாவமும் சேர்ந்து கர்மா எனப்படும்.

இன்பமும் துன்பமும் தனித்தனி இல்லை என்றறிக. இன்பத்தின் அளவுமுறை மாறும் போது இன்பத்தின் மறுபெயராம் துன்பம் விளையும்..

கர்மாவை பற்றிய சில கேள்விகள்:

  1. கர்மா எங்கே பதிகிறது? மனித மூளையில் என்று கூற முடியாது. ஏனெனில் அது இறந்தவுடன் அழிந்துவிடும்.
  2. பதிந்த கர்மாவிற்கு ஏற்ப நல்ல பலனையோ தீய பலனையோ தரும் அந்த நீதி பதி யார். வெறும் இறைவன் என்று சொல்லி மழுப்ப முடியாது. ஏனெனில் நாம் இறைவனையே பார்த்தது கிடையாது.
  3. இது ஒரு இயக்கமா ? இல்லை இயக்கப்படும் நிகழ்ச்சியா?
  4. இன்று செய்த பாவத்திற்கு என்று தண்டனை.
  5. ஒருவன் இறக்கப்போகும் ஒரு நிமிடம் முன்பு ஒரு பெரிய பாவம் செய்தால், அவன் எப்படி தண்டனை அனுபவிக்க முடியும்.
  6. பெற்றோர்கள் செய்யும் பாவம் பிள்ளைகளுக்கு என்றால் அதை பெற்றோர்கள் advantage ஆக எடுத்துக்கொள்ளலாமா? குழந்தைகள் தானே துன்பப்பட போகிறார்கள் நாம் இல்லையே :-)
  7. கர்மாவின் படி தான் எல்லாமே நடக்கும் என்றால், எல்லோரும் வியக்கும் ஆழ்ந்த சிந்தனையாளர் திருவள்ளுவர், ஏன் முயற்சி தன மெய் வருத்தக் கூலி தரும் என்கிறார்.
  8. ஒருவன் செய்யும் கர்மா, வேறு யாரையெல்லாம் பாதிக்கும்.
  9. கர்மா தான் விதியா ?
  10. விதியை மாற்ற முடியுமா? 
  11. கர்மா என்கிற விஷயத்தில் இறைவனின் பங்கு எங்கு உள்ளது.
  12. கர்மாவை மாற்றும் பூஜை ஏதாவது உண்டா? இருந்தால் ஏன் பணம் படைத்தவர்கள் துன்புரவெண்டும். இல்லை அந்த பூஜையை செய்யக் கற்றவர்கள் ஏன் துன்பமோ இன்பமோ படவேண்டும்.
  13. கர்மாவில் நவக்ரஹங்களின் பங்கு என்ன?

கர்மா எத்தனை வகைப்படும்:?

1. சஞ்சித கர்மா - தாய் தந்தையரிடம் இருந்து அவர்களின் முன்னோர்களின் கர்மாவும் சேர்ந்து, பிறக்கும் பொழுதே பதிவுகளாக (DNA) வருவது.


2. ப்ராரத்தக் கர்மா - நாம் நமது 12 வயது முதல் செய்யும் செயல்களின் பதிவுகள்.


3. ஆகாம்ய கர்மா : மேற்கூறிய இரண்டு கர்மாக்களும், நமது ஆன்மாவிற்கு இச்சை ஊட்டி அதாவது தூண்டப்பட்டு செய்யும் செயல்களின் பதிவு. நல்ல குடும்பத்தில் பிறந்த ஒருவனுக்கு தீவிரவாதத்தில் இச்சைதூண்டி அதை நோக்கி சிந்திக்க வைப்பது. 
ஒரு பெண்/ஆண் மீது மிகுந்த பற்று காலத்தால் ஏற்ப்பட்டு அதனால் அவன்/அவள் வாழ்கையே தடம் புரள்வது. 
ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒருவனுக்கு ஒரு அறிவியலாளரின் நட்பின் மேல் இச்சையைத் தூண்டி அவனை உயந்த நிலைக்கு இட்டுச் செல்வது. எல்லாமே இப்பதிவின் விளைவே.


கர்மாவை எப்படி கற்பது?


கர்மாவை புரிந்து கொள்ள புராணங்களை படிக்க வேண்டிய அவசியமே இல்லை. உண்மையை சொன்னால், புராணங்களை வைத்து கர்மாவை புரியவைப்பது கடினம். அறிவியல் கொண்டு உணர்த்துவது தான் எளிது. கர்மாவை புடிந்துகொல்ல நாம் அவசியம் அலை இயக்கத்தை (Radiation)புரிந்துகொள்ள வேண்டும். உயிர், மனம் இவற்றை புரிந்து கொள்ள வேண்டும். காந்த இயக்கம் (Magnetism) பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு காந்தப் புலத்தில் ஒலி அல்லது ஓளி எப்படி பதிகிறது என்று புரிந்துகொள்ள வேண்டும். காந்தமாக பதிந்த ஒளியை மீண்டும் ஒளியாக மாற்றும் மூளை போன்ற கருவி CD Player or Tape Recorder பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். காந்த ஆற்றலை மின் ஆற்றலாக மற்றும் Dainamo வை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இது போதும். தெளிவாக அறிந்துகொள்ளலாம் கர்மாவை.


AXN என்ற channel லில் ghost adventure என்ற ஒரு நிகழ்ச்சியில், Electro magnetic meter ஐ ஆவிகளை அதாவது உயிரை கண்டு பிடிக்க உபயோகிப்பதை சற்று மனதில் ஓடவிட்டுக்கொண்டு அடுத்த பதிவை படிக்கவும்.

No comments:

Post a Comment